அண்ணாமலை BJP இல் இருந்து விலகிறாரா?அர்ப்ப­ணிப்­புள்ள ஒரு வீரன்..- பியூஷ் கோயல் விளக்கம்! – union minister piyush goyal explains why annamalai did not contest the assembly elections

சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை மற்றும் பியூஷ் கோயல்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி சார்பில் பாஜக 27 இடங்களை போட்டியிட உள்ளது. அதன்படி, 27 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த நிலையில்,வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் 2026

மேலும், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக போகிறாரா? அல்லது புதிய கட்சித் தொடங்க போகிறாரா? ஒருவேலை மேலிடத்தில் பெரிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலம் வரத்தொடங்கியது. இந்த நிலையில், அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

இந்த நிலையில்,தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமி­ழக சட் ­டப்­பே­ரவைத் தேர்­த­லுக் ­கான பாஜக வேட்பா­ளர் பட்­டி­யல் மாநி­லக் குழுவின் பரிந் ­து­ரை­கள் மற்றும் ஒவ்வொரு வேட்பா­ள ரின் விருப்பத்­தின்
அடிப்படை­யில் மிகக் கவ­ன­மா­கத் தேர்வு செய்யப்பட்­டுள்ளது. யார் எந்தத் தொகுதியில், எங்கு பணி யாற்ற விரும்­பு­கி­றார்­கள் என்பது முழுமையா­கக் கருத்­தில் கொண்டது.

அண்ணாமலை போட்டியிடாதது காரணம்

பாஜக முன்­னாள் மாநி­ல த் தலைவர் அண்­ணாமலை க ட்­சி­யின் அர்ப்ப­ணிப்­புள்ள ஒரு வீ­ரன்.அவர்தன்னை ஒரு குறிப்­பிட்ட தொகு­திக்குள் மட்­டு ம் முடக்­கிக் கொள்ள விரும் ப­வில்லை. மாறாக தமி­ழ­கம் முழுவ ­தும் சுற்­றுப்பய­ணம்செய்து க ட்­சி­யின் வெற்றிக் ­கா­கப் பணியாற்ற வேண்­டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்ப­டுத்­தி­னார். அத­னால், அண்ணாமலை இந் த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

பாஜ­க­வின் தேர்­தல்அறிக்கை­யின் முழுவதும் தயா­ரா­கி­விட்டது. அதை நாங்­கள் ஆய்வு செய்து
வருகி­றோம். விரை­வில் டெல்லிமேலி ­டத்­து­டன் கலந்தா­லோ­சித்து, இன்­னும் சில தினங்­க­ளில் அதிகாரப்­பூர்வ தேர்­தல்அறி க்கை வெளி­யி­டப் ப­டும். பாஜக வேட்பா­ளர்கள் அனைவ­ரும் இந்­தத் தே ர் ­த ­லில் அமோகவெற்றி பெ றுவார்­கள்என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.
தமிழகத்­தில் எடப்பாடி பழ­னிசா மி தலைமை­யி­லும்,மத்­தி­யில் பிர­த­மர் மோடிவ ழி ­காட் ­டு­த­லி­லும்தேசிய ஜன­நா­ய­கக் கூட டணி அடுத்த ஆட்­சியைஅமைக்­கும். தமி­ழக மக் ­க ள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்­கி­றார் ­கள், அந்த மாற்றத்தைத்தேசிய ஜன­நா­ய­கக் கூட்டணிநிச்சயம் வழங்­கும்.இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.