அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை.. -அதிபர் அநுரகுமார திசநாயக சொன்ன வார்த்தை! – sri lankan president anura kumara dissanayake has refused permission for an american warship to dock in the country

அமெரிக்க போர் விமானத்தை இலங்கையில் தரையிறங்க அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக(புகைப்படங்கள்Samayam Tamil)
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதல் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனால், உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஈரான் தன்னுடைய கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடல் வழித்தடத்தை மூடி உள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட உலக நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் தாக்குதல்

இத்தகைய சூழலில் அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இலங்கையில் தரைஇயங்குவதற்கு, அந்நாட்டு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளது பேசு பொருளாகி உள்ளது.கிழக்கு ஆப்பிரிக்கா நாடானு ஜிபூட்டியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து ஏவுகணைகளுடன் தென் கிழக்கு இலங்கையில் மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு வர இரண்டு அமெரிக்க போர் விமானங்களுக்கு மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் அனுமதி கூறப்பட்டன.ஆனால் இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அந்த வேண்டுகோளை நிராகரிக்கப்பட்டதாக இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக தெரிவித்துள்ள மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்ற சூழல் காரணமாக பல்வேறு சவால்களை ஏற்படுத்தினாலும், சர்வதேச விவகாரங்களில் இலங்கை தன்னுடைய நாடு நிலையத் தன்மையை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டிருக்கும் என்று கூறினார். மேலும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் செர்ஜியோ கோரை சந்தித்த மறுநாளே இந்த தகவலை இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக வெளியிட்டுள்ளார்.

Russia-Ukraine போர்:காரணங்கள் மற்றும் முக்கிய விவரங்கள்

அமெரிக்கவிமானங்கள் இலங்கை தரையிறங்க மறுப்பு

செர்ஜியோ கோருடன் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக நடந்த சந்திப்பில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வணிக உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், எந்தவித அழுத்தங்களுக்கும் பணிந்து நடுநிலையை கைவிடப் போவதில்லை என இலங்கை அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்று விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போர்க்கப்பலை இலங்கை கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் கடந்த 4ம் தேதி தாக்குதல் நடத்தியது .
இதனைத் தொடர்ந்து , மேற்கு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.இதனால், வான்படைத் தளம் முழுமையாக சேதமடைந்தது, மேலும் உளவுத் துறை தலைமையகங்களுக்கும் தரைமட்டமாகின. இதில்,அந்த போர் கப்பல் கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் சுமார் 84 பேர் உயிரிழந்த நிலையில் 32 மாடுமேய்கள் படுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனைத் தொடர்ந்து ஈரானின் மற்றொரு கப்பலான ஐரிஷ் புஷ்ஷர் என்ஜின் கோளாறு காரணமாக கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கூறியது.

இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக

ஆனால் பாதுகாப்பு நலன் கருதி ஈரான் போர்க்கப்பலை திரிகோணமலைக்கு திருப்பி விடப்பட்டது தற்பொழுது அந்த கப்பலில் இருந்து 24 வாழுமைகள் கொழும்பு அருகில் உள்ள கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஈரான் போரைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை ஸ்விட்சர்லாந்து அரசு அதிரடியாக நிறுத்தியுள்ளது. தனது நாட்டின் பாரம்பரிய நடுநிலையை கொள்கையை சுட்டிக்காட்டி சுவிட்சர்லாந்து அரசு ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்காது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.