அழகர் திருவிழா இல்லையென்றால்.. வைகையை ப்ளாட் போட்டு விற்றிருப்பார்கள் –சாட்டை துரைமுருகன் சர்ச்சை பேச்சு! – ntk saattai duraimurugan says azhagar festival is not held the vaigai river will be sold off

அமைச்சர் மூர்த்தி தனது 252 வது தலைமுறைக்கான சொத்தையும் சேர்த்து விட்டார் என சாட்டை துரை முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சாட்டை துரைமுருகன் பேச்சு(புகைப்படங்கள்Samayam Tamil)
மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரையின் முதல் கட்டமாக மதுரை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அதில், மதுரையில் வைகை ஆறு இறந்துவிட்டது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கவில்லை என்றால் வைகை ஆற்றை எப்போதும் பட்டா போட்டு விற்று இருப்பார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுரையில் மல்லிகை பூவுக்கு என தனியாக தொழிற்சாலை அமைக்கப்படும் அதன் அருகிலேயே சென்ட் தொழிற்சாலைகள் உட்பட பல தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தவெக மாநாட்டில் சீமான் ஒழிக கோஷம்- நாதக நிர்வாகி பதிலடி

அமைச்சர் மூர்த்தி தனது 252 வது தலைமுறைக்கான சொத்தை சேர்த்து விட்டார். மதுரையில் பத்திரப்பதிவுக்கு என பெருமளவு லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விஜயை விட அஜித் ரசிகர்கள் அதிகம் அஜித் கட்சியா ஆரம்பித்திருந்தால் அவருக்கும் கூட்டம் குடியிருக்கும் விஜய்க்கு கூடுவதை விட பத்து மடங்கு அதிகமாக கூடி இருக்கும். ஆனால் அஜித் நல்லவர் அப்படி செய்யவில்லை. திமுகவிற்கு திராவிடம் என்ற கொள்ளை உள்ளது. அதிமுக திராவிடத்தின் நீட்சி, பாஜகவிற்கு இந்துத்துவா என்ற கொள்கை உள்ளது.
மக்கள் நீதி மையத்திற்கு மையம் என்ற கொள்கை உள்ளது. இப்படி அனைத்து கட்சிகளுக்கும் கொள்கை உள்ளது ஆனால் தமிழக வெற்றி கழகத்திற்கு என்ன கொள்கை இருக்கிறது.36 வருடம் நடித்ததற்காகவே தன்னை முதலமைச்சராகி விடுங்கள் என விஜய் விரும்புகிறார். கரூரில் 41 பேர் இறந்தபோது களத்தில் இருக்காமல் விஜய் ஓடி விட்டார்.
மே நான்காம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வென்றார்கள் என்ற செய்தி வரும். மதுரை மாநகராட்சியில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது மதுரை மாநகராட்சியில் 250 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.மதுரை மாநகராட்சியில் வரிஏய்ப்பு செய்த புகாரில் திமுகவை சேர்ந்த 19 கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த புகாரில் கைதான கவுன்சிலர் கணவர் பொன் வசந்த் சமீபத்தில் தான் வெளிவந்தார் இவருக்கா உங்கள் வாக்கு.
2019 தேர்தலில் நான் எதார்த்தமாக கூறினேன் ஆற்று மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை என அனைத்தும் நடந்து விட்டது கிட்னி திருட்டும் நடக்கப்போகிறது என கூறினேன். அதன்படியே தற்போது திமுக எம்எல்ஏக்கள் ஏழை மக்களின் கிட்னியை திருடி விற்றுள்ளார்கள்.பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் குடும்பம் பாரம்பரிய குடும்பம் நல்ல மனிதர் திமுகவில் இருப்பதிலேயே அவர் நல்லவர் எனக் கூறுகிறார்கள்
ஆனால் யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை, திமுகவில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு என்ன வேலை. 30000 கோடி ரூபாய் திமுகவில் ஊழல் நடந்துள்ளது என ஆடியோ லீக் ஆனதே உண்மையாகவே நல்லவராக இருந்தால் பிறகு ஏன் திமுகவில் இருக்க வேண்டும். இன்னும் திமுகவில் இருக்கிறீர்கள் என்றால் அந்த ஊழலுக்கு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனும் தானே துணை போகிறார். குடும்பத்தில் பெருமை இல்லை மக்களுக்கு உண்மையாக இருக்கிறோமா என்பதில் தான் பெருமை என கூறினார்.