பொதுவாக, வழக்கான விமானங்கள் தரையிரங்கவோ அல்லது புறப்படவோ நீண்ட ஓடுதளங்கள் தேவைப்படும். இது, அனைத்து இடங்களுக்கும் சாத்தியமா என்றால் கேள்வி குறி தான். ஏனென்றால், விமான ஓடுதளங்கள் அமைக்க ஒரு நீண்ட மற்றும் அகலமான இடம் தேவைப்படுகிறது. ஆனால், அனைத்து பகுதிகளிலும் அப்படியான இடங்களை தேர்வு செய்து சற்று கடனமான விஷயம். அப்படி, விமான ஓடுதளங்களை அமைக்க முடியாத அல்லது அமைப்பது கடினமான உள்ள இடங்களுக்கு செல்வதற்காக கையில் எடுக்கப்பட்ட முயற்சியே இந்த கடல் விமான சேவை .
பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்ட ஒரு தொலைநோக்குப் பார்வையுடனும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆதரவுடனும், ஸ்கைஹாப் ஏவியேஷன் இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. அதன் வெளிபாடாக தான், கங்கை தடுப்பணையில் நீர் விமாத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஸ்கை ஹாப் விமானம் ஓடுதளம் இல்லாமல், நீரில் இருந்தே புறப்பட்டு, நீரிலேயே தரையிரக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது மற்றும் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து..உடைந்து பேசிய விஜய்
இந்த விமானத்தில் 19 இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. வலுவான நீரோட்டங்கள் இருந்தபோதிலும், தனது புதிய தொழில்நுட்ப வலிமையை பயன்படுத்தி சீராக இயங்கியது. இந்த நீர் விமான சேவை உத்தரகாண்ட் சுற்றுலாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால், உள்ளூர் வாடகை கார் ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் வழிகாட்டிகள் பெரிதும் பயனடைவார்கள். முதற்கட்டமாக, லட்சத்தீவுகளில் உள்ள 5 தீவுகளையும், இந்தியாவின் பிற பகுதிகளையும் இணைக்கும் வகையில் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்கவுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு நீர் விமான சேவை ஏன் அவசியம்?
வழக்கமான விமானங்களைப் போலல்லாமல், நீர் விமானங்களுக்கு நீண்ட ஓடுபாதைகள் தேவையில்லை. மேலும், விமானங்கள் நீரில் இருந்து நேரடியாக புறப்படுவதால், இந்தியாவின் புவியியல் அமைப்பு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். தீவுகள், ஆறுகள் மற்றும் கடற்கரை பகுதிகளை அதிகம் கொண்டுள்ள இந்தியாவில், இந்த சேவை பயண நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, புதிய சுற்றுலா பாதைகளை திறக்கவும் உதவும். இது, சுற்றுலா துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். விமான நிலையங்கள் இல்லாத கடலோரப் பகுதிகளுக்கும், கடினமான நிலப்பரப்புகளை கொண்ட இடங்களுக்கும் எளிதில் செய்ய முடியும்.
