திமுக கூட்டணியில் எங்களது கோரிக்கை இரட்டை இலக்க தொகுதிகள் என்றாலும் கூட நடைமுறை சாத்தியக்கூறுகளை கணக்கில் கொண்டு தான் முடிவெடுக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேசிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவெடுத்தது. இந்த சூழலில் 2026 காண சட்டமன்ற தேர்தலில் இரண்டு இலக்கத்தில் சீட் கேட்க இருப்பதாக விசிக தெரிவித்துள்ளது. இதற்கு திமுகவோ ஆறு அல்லது ஏழு இடங்களை மட்டுமே தருவதாக தெரிவித்து வருகிறது. இதனால் திமுக- விசிக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
திமுகவால் விசிக பெயர் கெட்டுப்போச்சு_- sangatamizhan vck
இதனைத் தொடர்ந்து இந்த நிலையில், நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், விசிகக்கு திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகளும், மேலும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகக்கு 10-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் என்றும், 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடத்தை உறுதியாக பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் திருமாவளவனிடம் இந்த உயர்நிலை குழு கோரிக்கை வைத்துள்ளது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு அழுத்ததை விசிக கொடுத்துள்ளது.
இந் த நிலையில்,சென்னையில் விசிக தலைவர் திருமாவளன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,மீண்டும் நாங்கள் திமுக பேச்சுவார்த்தை குழுவை சந்திக்க உள்ளோம். நாளை தொகுதி பங்கேடு இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட இருக்கிறோம். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் கட்சிகளுக்கெல்லாம் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு தான் எங்களுக்கான பங்கிட்டையும் வலியுறுத்துகிறோம்.
எங்களது கோரிக்கை இரட்டை இலக்கமாக இருக்கிறது. மேலும் நடைமுறை சாத்திய கூறுகளையும் நினைவில் கொண்டு தான் இறுதி முடிவை எடுக்க உள்ளோம். இந்த தேர்தலில் பொது தொகுதியில் வீசிக்க போட்டியிட வாய்ப்புள்ளதா என்று கேள்விக்கு? கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளை கேட்டோம் இரண்டிலும் வெற்றி பெற்றோம். இந்த முறை வெற்றி வாய்ப்பை கணக்கில் கொண்டு தொகுதியை முடிவெடுப்போம்.
திமுக கூட்டணி என்பது வெற்றி கூட்டணி. ஒரு சில தினங்களில் அனைத்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடையும். அதன் பிறகு, எந்தெந்த கட்சிகளுக்கு தொகுதி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறும். திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும் என்று நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என்று கூறினார்.
திமுக கூட்டணி கருத்தியதல் சார்ந்த கூட்டணியாக இருக்கிறது. பெருவாரியான மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளது. இடது சாரி சிந்தனை உள்ளவர்களும் ஜனநாயக சிந்தனை உள்ளவர்களும் திமுக கூட்டணியில் அங்கு வகித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக மக்களின் நன் மதிப்பை பெற்ற கூட்டணி என்று தெரிவித்தார்.
