இலங்கையின் சுற்றுலா துறை தொடர் வீழ்ச்சி: பயணிகள் வருகை அதிகரித்த போதும் 15% குறைந்த வருமானம்! – sri lanka tourism faces continuous decline revenue falls 15 pc despite more tourist

சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் வருமானமே இலங்கையின் மிக முக்கியமான பொருளாதார மூலம் ஆகும். இதன் வருமானம் 2025 -ஆம் ஆண்டில் ஓரளவுக்கு அதிகரித்து இருந்தது. ஆனால் கடந்த 2025 டிசம்பரில் சுற்றுலாத் துறையின் வருமானம் அதற்கு முந்தைய ஆண்டை விடவும் 14.8 சதவீதம் குறைந்து இருந்தது.

அதன் பின்னர் வெளிநாட்டு பயணிகளின் வருகையால் மெல்ல மெல்ல உயர்ந்து 4.2 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. இலங்கைக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், கடந்த ஆறு மாதங்களில் இந்தத் துறை அதன் வருவாயில் நான்காவது முறையாக தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏன் இந்த தொடர் சரிவு?

இலங்கைக்குள் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அன்றாட செலவுகள் குறைந்ததாலேயே இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருக்க கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். கடந்த 2025 ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் , பயணிகள் அன்றாடம் செலவிடும் தொகை 171 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால் தற்போது அந்த தொகை 148 அமெரிக்க டாலராக குறைந்து விட்டது.

இலங்கை பொருளாதார நெருக்கடி – காரணமும், பின்னணியும்..

இதன் காரணமாகத் தான் இந்த தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் அதிக அளவில் வருகை தந்த போதும் அவர்களின் அன்றாட செலவினங்கள் குறைந்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர் சவால்களை சந்திக்கும் சுற்றுலா துறை

மாதாந்திர தரவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்காக வந்து சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலா துறையின் வருமானம் 4 முறை சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த 2025 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா செலவின மதிப்பீடு திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த திருத்தத்துக்கு பிறகு இலங்கை சுற்றுலாத்துறை பலவகையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் 2025 -ல் பயணிகளின் வருகை 15.1 சதவீதம் அதிகரித்த போதும், அது பொருளாதார வளர்ச்சியில் எந்தவித குறிப்பிடத்தகுந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 2018 -ஆம் ஆண்டு அதன் உச்சத்தில் இருந்தது. அப்போது நாட்டின் பொருளாதாரத்தில் 5 சதவீத பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

பேரிடரில் சிக்கிய முக்கிய சுற்றுலா தலங்கள்

இலங்கை தொடர்ந்து பாதகமான இயற்கை சவால்களை சந்தித்துக் கொண்டே தான் வருகிறது. மத்திய இலங்கையின் கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் வெள்ளத்தில் சிக்கியது. ஆனாலும் பயணிகளின் வருகை குறையவே இல்லை. இருப்பினும் இந்த விஷயங்கள் எதுவும் பொருளாதார ரீதியான பலன்களை அதிகப்படுத்தவில்லை என நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாவை நம்பியே இலங்கை பொருளாதாரம்

2019 ஈஸ்டர் சமயத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், கொரோனா பேரிடர், கடும் பஞ்சம் என்ற பல இக்கட்டான சூழ்நிலைகளில் அந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கியது அந்த நாட்டின் சுற்றுலாத்துறை தான்.

இலங்கையின் பரந்த பொருளாதார கொள்கையில், அந்நிய செலாவணி அந்த துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் என அனைத்திற்கும் சுற்றுலாத்துறை தான் பங்களிக்கிறது. ஆனாலும், இதுபோன்ற தொடர் சரிவுகள் அந்த துறையின் செலவீனங்களை அதிகப்படுத்தி, வர்த்தகத்தில் பாதிப்பை உருவாக்கும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

Source link