உடற்பயிற்சியின் பலன்களைக் காண எவ்வளவு காலம் ஆகும்..?

உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், மன அமைதியும் கிடைக்கும். மேலும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் இது உதவுகிறது. இருப்பினும், உடற்பயிற்சியைத் தொடங்கிய பலர், அதன் பலன்களை உடனடியாகக் காண விரும்புகின்றனர். அது நடக்காதபோது விரக்தியடையும் நிலையும் உருவாகிறது. முதலில் உடற்பயிற்சியைத் தொடங்கிய பிறகு, பலன்களைக் காண எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரிந்துகொள்வோம்.

உடற்பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றம் ஆளுக்கு ஆள் மாறுபடும். அதன் முடிவுகள், உடற்பயிற்சியின் வகை மற்றும் அதை நீங்கள் எவ்வளவு சீராகச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். இதில் உணவுமுறை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், குறைந்தபட்சம் 2 முதல் 4 வாரங்களுக்குத் தொடர்ச்சியாகச் செய்தால் மாற்றங்களைக் கவனிப்பார்கள். சிலர் 6 முதல் 12 வாரங்களுக்குப் பிறகு மாற்றங்களைக் காண்பார்கள். இடையில் முயற்சி செய்வதை நிறுத்திவிடாமல் தொடர்ச்சியாகச் செய்தால் மட்டுமே விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள்.

உடற்பயிற்சியின் பலன்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக கிடைக்காது. ஒருவரின் வயது, பாலினம், வளர்சிதை மாற்றம் (Metabolism) போன்ற பல காரணிகள், உடலில் மாற்றங்கள் எவ்வளவு வேகமாக ஏற்படும் என்பதை நிர்ணயிக்கின்றன. நிபுணர்கள் கூறுவதாவது, பொதுவாக பெண்களை விட ஆண்களில் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும். இதனால், ஆண்களின் உடல் அதிக கலோரிகளை விரைவாக எரிக்கிறது. அதனால் தான், உடற்பயிற்சி தொடங்கிய பின், மாற்றங்கள் ஆண்களில் வேகமாகக் காணப்படுகின்றன.

மேலும், ஆண்களின் உடல் அமைப்பில் பெண்களை விட அதிக தசைகள் (muscle mass) காணப்படும். இந்த தசைகள் செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படுவதால், ஆண்களின் உடல் ஒரு நாளில் அதிக கலோரிகளை பயன்படுத்துகிறது. கடுமையான உடற்பயிற்சியின் பலன்களைக் காண ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆவது சற்றே ஏமாற்றமளிப்பதாகத் தோன்றலாம். ஆனால், உடற்பயிற்சி உடலில் கண்ணுக்குப் புலப்படாத பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதனால்தான், நீங்கள் தினமும் இடைவிடாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Next Post

Fri Apr 10 , 2026

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

Jewellery 1

Source link