ஏன் அதை பத்தி பேசவே மாட்டேங்கிறீங்க.. கள்ளகுறிச்சி பரப்புரையில் சீமானை கேள்வி கேட்ட பெண்- நடந்தது என்ன? – kallakurichi ntk campaign women safety issue a woman questions seeman

கள்ளகுறிச்சியில் பரப்புரையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பெண்கள் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seeman(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் 2026 காண சட்டமன்றத் தேர்தல் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே டு ஆர் டை என்ற தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம் விஜயின் அரசியல் வரியை தான். இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் திமுக அதிமுக இரு கட்சிகளின் சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை சிதற செய்யும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2016 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய சீமான் ஒரு சதவீத வாக்கு பெற்றார் .அப்போது தொடங்கிய அவரது அரசியல் பயணம் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.2 சதவீதத்தை எட்டியது. இந்த நிலையான வளர்ச்சி அவர் பின்பற்றி வரும் தனித்துப் போட்டியிடும் அரசியல் நோக்கத்திற்கு கிடைத்த ஆதரவாக பார்க்கப்படுகிறது. கூட்டணி இல்லாமல் தனியாகவே தேர்தலை சந்திக்கும் அவரது முடிவு அரசியல் வட்டாரங்களில் தனி கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம அளவில் வாய்ப்பு வழங்கி வேட்பாளர்களின் அறிவிப்பதில் அவர் காட்டும் வேகம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக எழும்பூர், ஆர்.கே.நகர், வேளச்சேரி போன்ற முக்கியமான தொகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டவர்களுக்கு அவர் வாய்ப்பு வழங்கியிருப்பது, கட்சியின் அடிப்படை வலிமையை மேலும் பலப்படுத்தியுள்ளது.

முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்காக இன்னும் ஒரு மாத காலமே எஞ்சி உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன ஒரு புறம் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் வாக்காளர்கள் இருக்க பல்வேறு வாக்குறுதிகளும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த முறையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்துப் போட்டியிட உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 462 பக்கங்கள் கொண்ட விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் பெண்களுக்கு முன்னுரிமை விவசாயிகளுக்கு ஓய்வுதியும், இலவச மருத்துவம், உள்ளிட்டவைகள் மக்கள் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த அறிக்கையில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் தெளிவாக சீமான் குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருத்தணியில் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தன்னுடைய முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சேலம், ஆத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் அடுத்தடுத்து பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசிக் கொண்டிருந்த பொழுது கூட்டத்திலிருந்து பெண்கள் சிலர் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,இன்றைக்கு தமிழ்நாட்டில் இரண்டு வயது பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது அதை பற்றி தன்னுடைய பிரச்சாரத்தில் நீங்கள் பேச வேண்டும். உன்னுடைய மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவள் படுத்து முடித்துவிட்டு வீடு திரும்ப காலதாமதம் ஆனால் கூட பதற்றத்தில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு உடனே சீமான் உங்களுக்காக நான் இருக்கிறேன் உங்கள் பாதுகாப்பை நான் உறுதி செய்வேன். என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறினார்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.