தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் பணிக்கு விடுமுறை உண்டா? இல்லையா? மற்றம் அன்று சம்பளம் கிடைக்குமா? கிடைக்காத என்பது பற்றி பார்ப்போம்.
நிறுவனங்களுக்குத் தேர்தல் ஆணையம் விடுத்த கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி அன்று ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் “சம்பளத்துடன் கூடிய விடுமுறை” (Paid Holiday) வழங்குவது கட்டாயம் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பிரிவு 135B-ன் முக்கியத்துவம்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் உள்ள பிரிவு 135B-ன்படி, தேர்தல் நடைபெறும் நாளில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இது ஒரு பரிந்துரை அல்ல, சட்டப்பூர்வமான ஆணை. இதனை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
யார் யாருக்குப் பொருந்தும்?
இந்த உத்தரவு தினக்கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கிப் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஐடி (IT) நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்து வேலை’ (Work From Home) அல்லது ‘ஷிப்ட்’ முறையைப் பின்பற்றி விடுமுறை அளிக்கத் தவறினால், அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். ஒருவேளை தேர்தல் பணியில் ஈடுபடும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படலாம், ஆனால் அவர்களுக்கும் வாக்களிக்கப் போதிய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்
புகார் அளிப்பது எப்படி?
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஊழியர்கள் அந்தந்த மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமோ அல்லது தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா உதவி எண்ணான 1950-க்கோ புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
