சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று சென்னையில் நடைபெற்ற, பாரத் சேவா அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது விழாவில் அவர் தன் கணவர் ரஜினிகாந்த் குறித்து பெருமையாகக் கூறினார்.
கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது. என் கணவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக் கொள்கிறேன். என் முயற்சிகள் அனைத்தையும் எனது கணவருக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.
