அந்த வகையில் இன்று காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.இதற்காக காவல்துறை சார்ப்பில் 30 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக காரைக்குடி பேருந்து நிலையம் அருகே மதியம் 12 மணி முதல் 3 மணிவரை பேச தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டது.இதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி வந்தார் விஜய்.அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி நோக்கி புறப்பட்டார்.
விஜய்யின் வருகைகாக காலை முதலே வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில்,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென வாகன சோதனை செய்தனர். வாகனத்தில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதும் இல்லததால்,விஜய் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
கொதித்த விஜய்…திமுக மீது கடும் விமர்சனம்!
தொடர்ந்து விஜய் வாகனத்தை தொடர்ந்து ஏராளமான வருகை தருகின்றனர். இதனால், தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பிரச்சார வாகனத்தில் பரப்புரை மேற்க்கொள்ள இதுவரை அனுமதி வழங்கபடவில்லை. எவ்வளவு அறிவுரைகளை சொன்னாலும், தொண்டர்கள் விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளது. மேலும், விஜய் பரப்புரை செய்யும் வாகனத்தின் மீது ஏறுவது, கையில் இருக்கும் பொருள்களை எடுத்து எறிவது உள்ளிட்ட அச்சுறுத்தும் நடவடிகையில் தொண்டர்கள் ஈடுப்படுவதால் பாதுக்காப்பு கேள்வி குறியாகி உள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய் உரிய நேரத்தில் பரப்புரைக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், காரைக்குடி நகருக்குள் பிரச்சார வாகனத்தில் சென்றபோது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் வாகனம் நகர முடியாமல் ஸ்தம்பித்தது. இதனால், கூட்டத்தை கடந்து செல்வதற்காக விஜய் திடீரென தனது வாகனத்திலிருந்து இறங்கி சைக்கிளில் பயணிக்கத் தொடங்கினார். விஜய் சைக்கிளில் செல்வதைக் கண்ட ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில், சைக்கிளில் இருந்து இறங்கி மீண்டும் பிரச்சார வாகனத்தில் ஏற முயன்றபோது விஜய் நிலைதடுமாறி விழச் சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவுன்சர்கள் உடனடியாக அருகிலிருந்த அவரைப் பிடித்து மீட்டனர்.பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி பயணம் செய்தார்.
குறிப்பாக காரைக்குடி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்ய மதியம் 12:00 மணி முதல் 2:30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் விஜய் வருவதற்கு 3 மணி நேரத்திற்கு மேலாக கடந்தது. மேலும் கூட்ட நெரிசலால் குறிப்பிட்ட இடத்திற்கு வர தாமதமானதாலும், அனுமதி வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாலும் விஜய் எந்தவித உரையும் நிகழ்த்தாமல் அங்கிருந்து கிளம்பினார்.இதனால் காலையில் இருந்து கடும் வெயிலில் காத்திருந்த தவெக தொண்டர்கள் பலமணி நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் சீமான் களமிறங்கவுள்ளார். இதனால், அந்த தொகுதி நட்சத்திர வேட்பாளர் தொகுதியாக மாறியுள்ளது.இதனால் விஜய் சீமானை விமர்சிப்பாரா என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது .மக்களைச் சந்திக்க வந்துவிட்டு, அவர்களைச் சந்திக்காமலேயே செல்வது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
