திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பெரியசாமி கூறியதாவது,
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.வெளியுறவு கொள்கையில் தோற்றுவிட்டனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் 2029 பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படு தோல்வி அடையும்.
கூடுதல் சீட் கேட்பது கூட்டணி கட்சிகளின் உரிமை இதுகுறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார். கருத்துக் கணிப்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல் இடத்திலும், தி.மு.க. 2ம் இடத்திலும் இருப்பதாக கூறுவது பொய். இது கருத்துக்கணிப்பு இல்லை. என தெரிவித்தார்.
