10 ஆண்டுகளாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நிதி அமைச்சராக இருந்த அவர் மத்திய தொகுதியில் மோசமான சாலைகள், கழிவுநீர் பிரச்சனை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு முறையான கழிவறை வசதி கூட ஏற்படுத்திதரவில்லை.
அறிவு இருக்க எந்த மனிதனும் கேட்க கூடிய கேள்வி தான் நான் கேட்ட கேள்வி.அமைச்சர் பிடிஆர் அவருடைய அறியாமையை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.உங்களுக்கு முடியவில்லை என்றால் நல்ல வேட்பாளரை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என பி டி ஆர் எங்களுக்கு ஆதரவாகவே பேசி உள்ளார்.
டென்ஷன் ஆகும் திமுக ஆதரவாளர்கள்! காரணம் காங்கிரஸ்?
கேள்வி கேட்பதற்கு அமெரிக்க சென்று பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .சிறு குழந்தை கூட கேட்கும் மத்திய தொகுதியில் அடிப்படை பிரச்சனை இல்லை என.எல்லாவற்றிலும் சுத்தமானவர் என கூறுபவர் மதுரை வளர்ச்சிக்கு அவரை செயல்பட விடாமல் நிர்பந்திப்பது யார் என்று வெளிப்படையாக கூற வேண்டும்.
ஐயா நாங்கள் உங்களை போல மெத்த படித்தவர்கள் கிடையாது.நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன்
கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவன்.வெளிப்படையாக காரணத்தை சொல்லவில்லை என்றால் போட்டியில் இருந்து ராஜினாமா பண்ணுங்கள்..மதுரை வளர்ச்சிக்கு உங்களை செயலாற்ற விடாமல் தடுக்கிறார்கள் என்றால் அப்போது ஏன் அந்த கட்சியில் வேட்பாளராக நிற்கிறீர்கள்.
அமைச்சருக்கு கை சுத்தம் வாய் என்று கூறுகிறார்கள். ஆனால் அவரை சுற்றி உள்ளவர்கள் யாரும் சுத்தம் கிடையாது. அப்புறம் எப்படி அவர் சுத்தமானவராக இருக்க முடியும்.மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.அதுவும் அவர் கூட இருப்பவர்கள்தான் அதை செய்துள்ளனர்.சினிமாக்காரர்களை விமர்சனம் செய்யும் உதயநிதி எங்கிருந்து வந்தார் ?அவர்கள் வைக்கும் விமர்சனமெல்லாம் ஆள்காட்டி விரலை பார்த்து அவர்களை அவரே கேட்டுக் கொள்வது போலத்தான் என்றார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமிறங்கியுள்ளார்.அதே போல் திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட உள்ளார்.
மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களத்தில் நேரடியாக சென்று மக்கள் சந்தித்து பேசுவதால், அவருக்கு பலம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது.
