தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுவென நடந்து கொண்டிருக்கிறது. முதல் நாளில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரது பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பின்னர் தனது பரப்புரை வாகனத்தில் ஏறி புறப்பட்டார். வழி நெடுகிலும் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறே சென்றது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
கடந்த மூன்று முறை நின்றதை காட்டிலும், நான்காவது முறை அதிக அளவிலான ஆதரவை கண்கூடாக பார்க்கிறேன். இது மக்கள் நலக் கூட்டணி அல்ல. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. டெல்லியை எதிர்த்து தமிழ்நாடு போராடி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு உரிமையை காப்பாற்றுவதற்காக இந்த வெற்றி பெரிய வெற்றியாக அமையப் போகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
