கோவை திமுகவை செந்தில் பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளார் என்று பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கரூரில் இருந்து 18 சுயேச்சைகளை கோவையில் களம் இறக்கியிருக்கிறார் செந்தில்பாலாஜி. கோவை திமுகவை செந்தில் பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளார். அதிமுக வேட்பாளர் கண்ணியமாக தேர்தல் பரப்புரை செய்கிறார். திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என்று கூறினார்.
