சட்டமன்ற தேர்தல் 2026 – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை! – 2026 elections archana patnaik reviews security arrangements with officials

பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Chief Electoral Officer Tamil Nadu(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 -ஆம் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலம் முழுக்க 5 கோடி 67 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 72,032 வாக்குச்சாவடி மையங்களும், 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்படவுள்ளது.

வாக்குச்சாவடி நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்திற்கு இதுவரை 300 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுவது, வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

12 D Form விநியோகம்!

தேர்தல் நடைபெறும் நாளை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக பல்வேறு கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்து தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.