சிக்கலில் அமெரிக்கா .. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம் – மேற்காசியாவில் தொடரும் பதற்றம்! – trump seeks help from mediating countries to reopen the strait of hormuz

மேற்காசிய போர்: ஹார்மோஸ் நீரிணையை திறக்க மத்யஸ்த நாடுகளின் உதவியை நாடிய டிரம்ப்

US President Trump(புகைப்படங்கள்Samayam Tamil)
கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

இந்த திடீர் தாக்குதலில் ஈரான் முழுக்க 2000 இலக்குகள் குறிவைக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவின் உலக அமைப்புகள் கிட்டத்தட்ட பல வாரங்களாக மனித உழைப்பையும் தொழில்நுட்பங்களையும் செலவு செய்து இந்த தாக்குதலை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய ஈரான் அமெரிக்காவின் தளவாடங்கள் அமைந்திருக்கக்கூடிய வளைகுடா நாடுகளை முற்றிலுமாக தாக்கத் தொடங்கியது. அதோடு மட்டுமல்லாது வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் குறிப்பாக அராம்கோ உள்ளிட்ட ஆலைகளை தாக்க தொடங்கியது. மேலும் உலகளாவிய கச்சா எண்ணெய்க்கு மூலமாக விளங்கக்கூடிய ஹார்மோஸ் நீரிணை மூடியது.

தொடர்ந்து மேற்கு ஆசியா முழுக்க விரிவடைந்த இந்த போரால் உலகம் முழுக்க அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி ஹார்மோஸ் நீரிணையை மூடியதால் உலகம் முழுக்க எரிபொருள் தட்டுப்பாடு உருவாகி இருக்கிறது அதிலும் குறிப்பாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களின் கட்டுப்பாடு அதிகரித்தவுடன் பெட்ரோல் விலையும் உயரும் என சொல்லப்படுகிறது.
இந்த சூழலில்தான் ஹார்மோஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தியின் நிலையங்கள் தாக்கப்படும் என அமெரிக்க அதிபர் எச்சரித்து இருந்தார். ஆனால் ஈரான் அந்த எச்சரிக்கைக்கு பதில் வினையாற்றி இருந்தது. இந்தசூழலில்தான் ஈரான் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை மறுத்து பேசியுள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாப் அமெரிக்காவுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை எனவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தனது சிக்கலில் இருந்து தப்புவதற்காக தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். ஈரானின் பதில் வினை தொடர் தாக்குதல்கள் அமெரிக்காவை நிலைகுலைய செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகின்றன.
மேலும் அமெரிக்காவின் போக்கால் நேட்டோ நாடுகள் உட்பட வளைகுடா நாடுகளும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தசூழலில்தான் நடுநிலையான நாடுகளுடன் தொடர்பு கொண்டு ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க முயல்வதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
தொடர்ந்து நேற்றைய தினம் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஹர்மோஸ் நீரினையை திறப்பதன் முக்கியம் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சமூக ஊடகங்களில் தெரிவித்திருக்கிறார்.

இந்த போருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர்தான் காரணம்!

அமெரிக்காவின் தேசியக்காவல் தளத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நடத்த வேண்டும் என முதலில் பரிந்துரைத்தது மூத்த மந்திரி பீட் ஹெக்சேத் தான்அவர் மீது பழிபோட்டுள்ளார் அதிபர் டிரம்ப். ஈரானின் கையில் அணு ஆயுதம் இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது என்று அவர் பீட் ஹெக்சேத் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் ஹார்முஸ் நீரிணை விரை வில் திறக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.