கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் நேற்று (மார்ச் 17 ஆம் தேதி) திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி இருந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பான கேள்விகளை கேட்டறிந்தனர்.
மார்ச் 15-ல் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
இதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த மார்ச் 15 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்து இருந்தார். அன்றைய நாள் தான் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
நேற்று சிபிஐ விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜர்
இந்த விசாரணையானது விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய மூன்றாம் கட்ட விசாரணையாகும். இதற்கு முன்பாகவே விஜய்யிடம் இரண்டு முறை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி செந்தில் பாலாஜி நேற்று (மார்ச் 17 ஆம் தேதி) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார்.
செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு
காலையில் சுமார் 10 மணி அளவில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணை நிறைவடைந்து சென்னை திரும்பிய செந்தில் பாலாஜியிடம், இந்த விசாரணை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
முறையான பதிலை வழங்கி இருக்கிறேன் – செந்தில் பாலாஜி
அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் ஒரு சில கேள்விகளை முன் வைத்தார்கள். அந்த கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கி இருக்கிறேன்.
பொதுவெளியில் சொன்னால் சரியாக இருக்காது
குறிப்பாக சாட்சிகள் என்ற அடிப்படையில், நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்விகளை முன் வைத்தார்கள். அந்த கேள்விகளுக்கு என்ன பதில் கூறினேன் என்பதை பொதுவெளியில் சொன்னால் சரியாக இருக்கிறது. முறையான கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளேன். சம்மனில் 10.30 மணி அளவில் வர சொல்லி இருந்தார்கள். 10.15 மணிக்கு சென்று விட்டேன். 5 மணிக்கு விசாரணை நிறைவு பெற்றது. கேள்விகள் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியவில்லை.
யார் மீதும் சந்தேகம் உள்ளதா_ சிபிஐ அலுவலகத்தில் நடந்த விசாரணை! Explained
சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகங்கள் இருந்திருக்கலாம்
சிபிஐ அதிகாரிகளுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்திருக்கலாம். அதன் அடிப்படையில் அவர்கள் என்னை அழைத்திருக்கலாம். அங்கு களத்தில் இருந்து பணியாற்றி தன் அடிப்படையில், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில்களை வழங்கி உள்ளேன் என்று கூறினார்.
