சென்னை,
சென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4) இருவரும் உயிரிழந்தநிலையில், அந்த குழந்தையின் பெற்றோர் சஞ்சய் (31) தாய் சோனியா (26), மற்றும் சோனியாவின் தாயார் சித்ரா (46), பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் பிரதீப் (7) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தநிலையில், மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சம்பவத்தில் 3 வீடுகள் சேதமடைந்த நிலையில், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
