சேலம்: அரசு பள்ளி ஆசிரியை வெட்டி படுகொலை.. பள்ளி வளாகத்தில் நடந்த பயங்கரம்.. – salem government school teacher murdered by her husband tragic incident

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் செயல்பட்டு வந்த அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் ஸ்ரீவித்யா. இவர் இன்று பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவருடைய கணவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டிக் படுகொலை செய்துள்ளார். இக்கொடூர சம்பவம் குறித்த பின்னணியை பார்ப்போம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் செயல்பட்டு வந்த அரசு உயர் நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அப்பள்ளியில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸ்ரீவித்யா அப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு விஜய முருகன் என்பவரும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது.

இந்த நிலையில், இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஸ்ரீவித்யா பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கணவர் விஜய முருகன் பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு வந்து, ஸ்ரீவித்யாவிடம் தகராறில் ஈடுபடவே, வாக்குவாதம் முற்றி போக, விஜய முருகன் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் ஸ்ரீவித்யாவை கடுமையாக வெட்டி உள்ளார்.

அவரை பிடிக்க முற்பட்டபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கணவன் வெட்டியதில் படுகாயமடைந்த ஸ்ரீவித்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஸ்ரீவித்யாவின் உடலை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. சொந்த மனைவியே படுகொலை செய்த கணவர் விஜய முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விஜய முருகம் பள்ளி வளாகத்திற்கு எப்படி வந்தார்? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்பது குறித்தும் ஓமலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் சிறுமியை தாக்கிய சிறுத்தை: கூண்டில் அடைத்த அதிகாரிகள்..!

அதேசமயம், தலைமறைவாக உள்ள விஜய முருகனை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். மேலும், விசாரணையில் விஜய முருகன் ஏற்கனவே தனது சொந்த குழந்தையை கெடுத்து கொன்ற உண்மையும் அம்பலமாகி உள்ளது. பட்டபகலில் பள்ளி வளாகத்தில் தனது சொந்த மனைவியை வெட்டிக் கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link