ஞானபீட விருது வென்ற வைரமுத்துக்கு ரஜினி வாழ்த்து

சென்னை,

இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம் விருதை பெறும் 3வது தமிழர் என்கிற பெருமையை வைரமுத்து பெறுகிறார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் “நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ” என்று தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்,

Source link