டெல்லி சென்றால் ஸ்டாலினுக்கு பயமா?அமெரிக்காவே மிரட்டினாலும்..- டிடிவி.தினகரனுக்கு ஓபிஎஸ் நச் பதிலடி! – ops responds to ttv dhinakaran criticism that stalin is afraid to go to delhi

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தலைமையில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

டெல்லி சென்றாலே தமிழக முதல்வர் பயப்படுவார் என்று கூறுவது முற்றிலும் தவறு. மு. க. ஸ்டாலின் அவர்களை யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார். தமிழ்நாடு என்றைக்கும் தலை குனியாது என்றார்.

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் அரசு அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர்,தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது என்பதை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுன் என்ன தொழில் செய்கிறார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். யார் பண்ணையார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும், என்று பதிலடி கொடுத்தார்.இதற்கிடையில், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், அருகில் இருந்த அமைச்சரிடம் “எப்போது வெளியேறினர்?” என்று கேட்டுவிட்டு, பின்னர் மௌனமாக அங்கிருந்து நகர்ந்தார்.

மொத்தத்தில், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தமிழ்நாடு எப்போதும் தலை குனியாது என்ற அரசியல் நிலைப்பாட்டை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

Source link