தமிழகத்தில் ஒரே வாரத்தில் ரூ.151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்! – cash and goods worth ₹151 crore seized by election flying suade in tamil nadu

2026 சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறும் என கடந்த மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மாநிலம் தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அரசியல் கட்சிகளுக்கு பொது விதிகளும் தேர்தல் சமயத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளும் விதிக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் தான் மாநிலம் முழுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மாநில முழுக்க உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம், நகை உள்ள பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தான் தமிழ்நாடு முழுக்க கடந்த சில தினங்களில் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறதாக சொல்லப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டின நாயர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழகம் முழுக்க ரூபாய் 151 கோடி மதிப்பிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். மேலும் இப்படி உரிய ஆவணங்கள் அற்ற முறையற்ற விதத்தில் பணங்களும் நகைகளும் பொருட்களும் இடம் மாற்றம் செய்வது தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு 794 புகார்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார் மேலும் இதில் 20 புகார்கள் பரிசீலன் நிலையில் உள்ளதாகவும் மீதமுள் அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

புதிய வாக்காளர் அடையாள அட்டை குறித்த அப்டேட்

மேலும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவரில் 50 சதவீத நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார் மேலும் மீதமுள்ளவர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவியற்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப் படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மாநிலம் முழுக்க பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், தேர்தலில் வாக்கு பதிவு சதவீதத்தை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Source link