தமிழ்நாட்டை அதிகார வர்க்கம், சமூக நீதிக்கு எதிரானவர்கள் ஆட்சி செய்ய கூடாது.. -வேல்முருகன்! – tvk velmurugan says the bureaucracy must not rule tamil nadu

திமுகவில் துறைச் செயலரை பார்க்க அமைச்சர்கள் காத்து கிடக்கின்றனர் என தவாக தலைவர் வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

வேல்முருகன்(புகைப்படங்கள்Samayam Tamil)
2026க்கான சட்டமன்றத் தேர்தலில் திமுக இதுவரை இல்லாத அளவிற்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த வகையில் 2019 முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இந்த முறை நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதன்படி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஐந்து தொகுதிகளை வேல்முருகன் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை திமுக ஏற்கவில்லை. மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக விலகல்

அப்போது எங்களுக்கு தொகுதி பங்கீடு கூட ஒரு பிரச்சனை கிடையாது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீடு , தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட எங்களின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ,இதற்கு திமுக தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்காததால் கடந்த மார்ச் 22ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து திமுக கூட்டணியில் இருந்து தமிழகம் வாழ்வுரிமை கட்சி விலகுவதாக கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.மறுப்புறம் திமுகவில் இருந்து வேல்முருகன் விலகியத்தற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறப்படுகிறது.

எடப்பாடி – வேல்முருகன் சந்திப்பு

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட வேல்முருகன் -எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. இதில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தாவக வேல்முருகன் அதிமுகவுடன் கூட்டணி வைப்பரா என்ற கேள்வியும் எழுந்தது.ஆனால், ஒருப்போதும் பாசிச கட்சிகளுடன் இருக்கும் இடத்தில் தாவக ஒருப்போதும் கூட்டணி வைக்காது என்று கூட்டணிக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தி

தமிழகத்தில் வடபகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வன்னியர் சமூக மக்கள் தொகை முக்கியமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் 15–20 சதவீதம் வரை இருக்கலாம். வடதமிழ்நாட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்னியர் வாக்குகள் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாகும். இதனால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வன்னியர் ஆதரவு உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த தேர்தல்களில் பாமக அதிமுக திமுக ஆகியவை மாறி மாறி வன்னியர் ஆதரவைப் பயன்படுத்தி கூட்டணி வைத்திருந்தது. தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் தனது ஆதரவை எந்தக் கட்சிக்காக வழங்குவது என முடிவெடுக்கவில்லை.

வேல்முருகன் விலகியத்தற்கு திமுக அமைச்சர்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.
இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சியில் ஒன்றி கலந்துக் கொண்ட வேல்முருகன் திமுக குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீட்டில் துரைமுருகன் 3 மணி நேரம் காத்துக் கிடந்தார். முதல்வரின் செயலாளர் அமைச்சர் துரைமுருகனை பார்க்க மறுத்துவிட்டார். கண்ணீரோடு காரில் ஏறிப்போனார் துரைமுருகன் வழி அனுப்பி வைத்தது வேல்முருகன் சவால் விடுகிறேன்.

இந்த தகவலை துரைமுருகனால் மறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் துறை செயலாளர் பார்ப்பதற்கு பல அமைச்சர்கள் மாத கணக்கில் காத்துக் கிடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதிகாரம் மிக்க ஒருவரை பார்ப்பதற்கு சில அமைச்சர்களுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்க வில்லை. மேலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது யார் இந்த மண்ணை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அமைச்சர்கள் ஆள வேண்டும் அதிகார வர்க்கம் ஆட்சி செய்யக்கூடாது தமிழர் விரோத கூட்டம் சமூக நீதிக்கு எதிரானவர்கள் ஆட்சி செய்யக்கூடாது என்று கூறினார்.