திமுக – காங்கிரஸ் கூட்டணியை இனியும் ஆட்சியில் தொடரவிட்டால்… – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆளும் இமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சுமார் 30% முதல் 50% வரை ஊதியம் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருப்பது ஒன்றும் அத்தனை அதிர்ச்சியான தகவலல்ல. ஆட்சியில் இருந்த காலத்தில் ஆனானப்பட்ட இந்தியாவையே சுரண்டித் தின்று கடன்கார நாடாக்கிய காங்கிரசுக்கு இமாச்சல் பிரதேசம் போன்ற ஒரு சிறிய மாநிலத்தைத் திவாலாக்குவது அத்தனை கடினமா என்ன?

Also Read
பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்
கோப்புப்படம்

அதுமட்டுமன்றி அச்சாணி முறிந்த தேரும், இந்தியா கூட்டணியினர் ஆளும் மாநிலங்களும் சரியான இலக்கை நோக்கி நகரவே நகராது என்பதற்குத் தமிழகத்தை ஆளும் திமுக அரசே சிறந்த சான்று. இந்தியா கூட்டணியின் நகமும் சதையுமான திமுக, தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தின் சொந்த வருவாய் சுமார் ரூ.26 ஆயிரம் கோடி குறைந்துள்ளதோடு தமிழகத்தின் கடன் சுமை ரூ.10.62 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.

Also Read
தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம் – எடப்பாடி பழனிசாமி
கோப்புப்படம்

நல்லவேளையாக இந்தியாவில் மாநில அரசுகளுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சிக்காலம். இல்லையேல் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களில் உள்ள மக்கள் எல்லாம் ஊழல் அலையில் சிக்கி நிதிச்சுமையால் மூழ்கி இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள்.

நிதி மேலாண்மை, நிர்வாகச் சீர்திருத்தம், முறையாகத் திட்டமிடுதல் உள்ளிட்ட எவ்வித நிர்வாக லட்சணமும் இல்லாத திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை இனியும் ஆட்சியில் தொடரவிட்டால், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியமும் பிடுங்கப்படும்! ஒட்டுமொத்த அரசு இயந்திரமே முடக்கப்படும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தங்கம் விலை… ஒரே நாளில் 3 முறை மாற்றம்… சவரனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்வு
கோப்புப்படம்

Source link