திமுக தேர்தல் ஸ்ட்ராடஜி..25 தொகுதிகளில் பெண்களை களமிறக்கும் திமுக-தீர்மானிக்குமா வெற்றி? – dmk plans to field women candidates in 25 constituencies in the 2026 assembly elections.

Authored byVidhya|Samayam Tamil

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 25 தொகுதிகளில் பெண்களை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

dmk(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் மே 4-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதனால் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் பரப்புரைகள் மற்றும் பிரச்சாரங்களை நடத்த வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் 12 மகளிர்கள் போட்டியிட்டனர்.

அவர்களில் ஆறு பேர் வெற்றி பெற்ற நிலையில் கீதாஜீவன், கயல்விழி ஆகியோர் தற்பொழுது அமைச்சர்களாக உள்ளனர். ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் 1.31 கோடி மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை ஆகியவை திட்டங்களால் மகளிர் ஓட்டுக்களை மொத்தமாக தன் வசப்படுத்திக் கொண்டது திமுக தலைமை.

தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆

அதே போல் இந்த தேர்தலிலும் பெண்கள் ஓட்டுக்களை குறி வைத்து திமுக மேலிடம் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மகளிர் திட்டங்களின் ஓட்டுக்கள் முழுதும் கிடைக்குமா? அதற்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என வியூக நிறுவனங்களுடன் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, இலவச பஸ் பயண திட்டத்திற்கு மட்டுமே பெண்களிடம் வரவேற்பு உள்ளது தேர்தலில் திமுக வேட்பாளர்கள் ஆக 30 பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வியூக நிறுவனங்கள் ஆலோசனை வழங்கியதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.இதனை தொடர்ந்து திமுக அமைப்பு ரீதியாக செயல்படும் 77 மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மகளிர் வீதம் குறைந்தது. 25 தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக களம் இறக்க திமுக கட்சி தலைமை முடிவு செய்து உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.
அதேபோல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த போது நிர்வாகி அதிகமானவர்கள் கனிமொழி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர்.குறிப்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நிற்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி கனிமொழியிடம் கேட்டபோது எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்றார். இந்த நிலையில் திமுகவில் விருப்பமானோ அளித்தவர்களிடம் இன்று காலை முதல் 22ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டால், நேர்காணலில் கனிமொழி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கனிமொழி பொறுத்தவரை திமுகவில் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக கனிமொழி உள்ளார். குறிப்பாக மத்தியில் நாடாளுமன்றத்தில் திமுக சார்பாக எதிர்க்கட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். மேலும் டெல்லியில் கனிமொழியின் குரல் ஓங்கி காணப்படுகிறது. ஒருவேளை சட்டமன்றத் தேர்தலில் கனிமொழி வேட்பாளராக களம் இறக்கப்பட்டால் டெல்லியில் திமுகவின் ஆளுமை சற்று குறையும் என்று அறிவாலயம் கருத்து தெரிவித்து வருகிறது.