திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராகவேந்திரபுரம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தால் மூதாட்டி விஜயலெட்சுமி அதிர்ச்சியும், மன உளைச்சலுக்கும் ஆளானார். பின்னர், இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
