திருச்சி டூ கோவை… கரூர் ரூட்டில் வெறும் 2.5 மணி நேரம்- NHAI புதிய கிரீன்ஃபீல்டு 4 வழிச் சாலை! – trichy to coimbatore via karur four lane greenfield highway nhai dpr plan

கரூர் வழியாக திருச்சியில் இருந்து கோவை செல்வதற்கு புதிய நெடுஞ்சாலையை கட்டமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சமீபத்தில் டெண்டர் கோரப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Trichy to kovai Greenfield new Highway NHAI
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது மாநிலத்தின் அதிகாரம் முழுவதும் திமுக அரசின் கைகளில் இருந்து தேர்தல் ஆணையத்தின் கைகளுக்கு மாறியுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு சில நெடுஞ்சாலை திட்டங்களுக்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. உதாரணமாக திருச்சி – கோவை 4 வழி கிரீன்ஃபீல்டு சாலை திட்டத்தை சொல்லலாம். மொத்தம் 230 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலையை அமைக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி – கரூர் சாலை விரிவாக்கத்தில் சிக்கல்

திருச்சி - கரூர் சாலை விரிவாக்கத்தில் சிக்கல்

இதற்கான டெண்டர் கடந்த 16ஆம் தேதி வெளியானது தான் சமீபத்திய அப்டேட். திருச்சி மக்களவை எம்.பியாக இருக்கும் துரை வைகோ கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைத்த கோரிக்கைக்கு பலனாக, மத்திய அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. முன்னதாக புதிய கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலையை அமைப்பதற்கான தேவை ஏன் வந்தது என்று பார்த்துவிடலாம். தற்போதைய திருச்சி – கரூர் சாலையானது காவிரி ஆறு, ரயில்வே தண்டவாளம் என குறுகிய பகுதியில் அமைந்துள்ளது.

விவசாய நிலங்கள் வழியே கரூர் கிரீன்ஃபீல்டு சாலை

விவசாய நிலங்கள் வழியே கரூர் கிரீன்ஃபீல்டு சாலை

இதனை விரிவுபடுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே தான் மாற்று வழித்தடத்தை தேர்வு செய்ய முடிவு செய்தனர். இந்த புதிய சாலையானது விவசாய நிலங்கள், காலி இடங்கள் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. எனவே திருச்சியில் இருந்து கரூர் வழியாக கோவைக்கு நெடுஞ்சாலையானது பயணிக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக திருச்சி வடக்கு பைபாஸ் சாலை கட்டமைக்கப்படவுள்ளது. இது நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க உதவுகிறது.

திருச்சி, கோவை வர்த்தக ரீதியிலான பலன்கள்

திருச்சி, கோவை வர்த்தக ரீதியிலான பலன்கள்

தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் இடையில் பயண நேரத்தை குறைக்கவும், பிராந்திய ரீதியிலான இணைப்பின் மூலம் வர்த்தக மேம்பாட்டிற்கும் திருச்சி – கோவை கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலை உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூரின் பின்னலாடை தொழில்கள், திருச்சியில் சிறு குறு தொழில்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு பெரிதும் உதவக்கூடும். தற்போது சரியான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் வகையில் டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.

NHAI வெளியிட்ட டெண்டர்- ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து

NHAI வெளியிட்ட டெண்டர்- ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து

இதன்மூலம் கையெழுத்தாகும் ஒப்பந்த நிறுவனமானது போக்குவரத்து தொடர்பான ஆய்வுகள், எந்த வழித்தடத்தில் செல்வது பயனுள்ளதாக இருக்கும், நெருக்கடிகள் மற்றும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது, சாத்தியக் கூறுகள், சூழலியல் மற்றும் சமூக ரீதியிலான பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகள், விரிவான பொறியியல் வடிவமைப்பு ஆகியவை அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்குவர். அதுமட்டுமின்றி பலகட்ட சர்வேக்கள் நடத்துவர். திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிடுவர்.

கோவை பயணம் 2.5 மணி நேரம் தான்

கோவை பயணம் 2.5 மணி நேரம் தான்

முழு பணிகளையும் நிறைவேற்ற கால அவகாசம், திட்டத்திற்கான உபகரணங்களை எப்படி தேர்வு செய்வது, பைபாஸ் சாலைக்கான கட்டுமான ஆய்வு பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்கின்றனர். இந்த கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்தால் திருச்சியில் இருந்து கோவைக்கு பயண நேரம் 2 முதல் 2.5 மணி நேரமாக குறையும். தற்போது சுமார் 4 மணி நேரம் வரை ஆகிறது. இதில் பாதியாக குறைக்க புதிய நான்கு வழி நெடுஞ்சாலை திட்டம் கைகொடுக்கும் என்கின்றனர்.