திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 64 ஆயி ரத்து 136 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 23 ஆயிரத்து 255 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம் ஆகும்.

திருமலை வைகுண்டம் கியூ காம்ப் ளக்சில் 21 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அதில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ டோக்கன் கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 6 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link