சென்னை,
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி , வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
