திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, திருமணமாகி 5 மாதங்களே ஆன பி.எட். மாணவி உயிரிழப்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முக்கிய அம்சங்கள்:
- பி.எட். படித்து வந்த மாணவி
- திருமணமான 5 மாதங்களில் பெண் உயிரிழப்பு
- கணவன் நடத்திய நாடகம்
பி.எட். படித்து வந்த மாணவி
திருமணத்திற்கு பிறகு கணவன் வீட்டில் இருந்தபடியே கௌசல்யா இளங்கலை கல்வியியல் படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, காலை ராஜேஷ் வேலைக்கு சென்று இருக்கிறார். மதிய நேரத்தில் கௌசல்யா வீட்டில் மயங்கி கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தனர் வீட்டுக்கு ஓடோடி வந்த ராஜேஷ் உள்பக்கம் தாளிடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார் .சமையல் அறையில் கௌசல்யா மயங்கியபடி கிடந்துள்ளார். அவரின் தலையில் அடிபட்டிருந்தது தரையில் எண்ணெய் ஊற்றி கிடந்துள்ளது.உடனே மனைவியை மீட்ட ராஜேஷ் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
திருமணமான 5 மாதங்களில் பெண் உயிரிழப்பு
கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி இருக்கிறார்கள். உடனே ராஜேஷ் அவரின் மாமனாரான முருகனுக்கு தகவல் தெரிவித்தார். மகளின் முகத்தில் இருந்த காயங்கள் முருகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரின் பேரில் பொன்னேரி காவல் ஆய்வாளர் தமிழ் அன்பன் தலைமையில் காவல்துறை குழுவினர் கௌசல்யாவின் கணவர் ராஜேஷை காவல் நிலையம் அழைத்து வந்த தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர் அதையேதான் போலீசாரிடமும் கூறியிருக்கிறார்.
கௌசல்யாவின் தலையில் இருந்த காயம் கீழே விழுந்த போது ஏற்பட்டதைப் போன்று இல்லை. அதோடு அவரின் முகத்திலும் கழுத்திலும் இருந்த நகக்கிரல்கள் பற்றி கேட்டபோது ராஜேஷ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் போலீசாரின் ஒட்டுமொத்த சந்தேகமும் அவர் மீது திரும்பியது. அதில் தான் காதலியின் திட்டப்படி ராஜேஷ் மனைவியை கொலை செய்தது அம்பலமானது. செங்குன்றம் அடுத்த காந்திநகரை சேர்ந்த தீபிகா என்ற 21 வயது பெண்ணோடு ராஜேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தூரத்து உறவினரான தீபிகா ராஜேஷுக்கு தங்கை முறை உறவு .
கணவன் நடத்திய நாடகம்
ஆனால் அதையெல்லாம் மறந்த இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த காதலை பற்றி இருவரும் வீட்டில் கூற முடியாத நிலையில் இருந்துள்ளனர். இந்த சூழலில் தான் ராஜேஷ் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தனது காதலை வழியே சொல்ல முடியாததால் வேறு வழின்றி கௌசல்யாவை திருமணம் செய்து இருக்கிறார். ராஜேஷ் மனைவி கல்லூரிக்கு சென்ற பிறகு ராஜேஷ் காதலியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ராஜேஷும் தீபிகா தனிமையில் இருந்தபோது கௌசல்யா உயிரோடு இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது நீ உனது மனைவியை கொலை செய்துவிடு என தீபிகா காதலன் ராஜேஷுக்கு உத்தரவு போட்டு இருக்கிறார்.
சம்பவ த்தன்று செல்வதாக அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரிடமும் கூறிவிட்டு ராஜேஷ் கிளம்பி சென்றார். பிறகு யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வீட்டுக்குள் வந்த ராஜேஷ் காலில் தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யாவின் மூக்கை பொத்தி மூச்சை அடக்கையும் கழுத்தை நெரித்தும் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தின் போது கௌசல்யாவின் முகத்திலும் கழுத்திலும் நகக்கிரன் ஏற்பட்டுள்ளது. தரையில் உள்ள டைல்செல் கௌசல்யாவின் பின்னந்தலையை மோதி காயத்தை ஏற்படுத்தியுள்ளார். சமையலறையில் எண்ணெய் வழக்கி விழுந்து பிடிபட்டு கௌசல்யா உயிரிழந்தது போல சடலத்தை கடத்தி சித்தரித்திருக்கிறார்.
நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு
பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக தாளிட்ட ராஜேஷ் ஜன்னல் வழியே வெளியே எதிரி குதித்து யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் கொடுத்த தகவலின் பெயரில் வீட்டுக்கு வந்து மனைவியை காப்பாற்றுவது போல நாடகமாடியதாக வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் கொலை தடையங்களை மறைத்து தவறான தகவலை அளித்தல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்த பொன்னேரி போலீசார் ராஜேஷ் காதலி தீபா இருவரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குழல் மத்திய சிறையில் அடைத்தனர். கணவனை மனைவியை கொன்று நாடகமாடிய சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
