திறந்த கரங்களுடன் அமெரிக்கா… நம்ப மறுக்கும் ஈரான் – பாகிஸ்தானில் தொடங்கியது பேச்சுவார்த்தை! – pakistan hosts us-iran talks as tehran remains cautious

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானின் உயர் அதிகாரிகள் கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து போர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு சாதகமான அரசியல் சூழல் உருவாகும் என சொல்லப்படுகிறது.

மேற்காசிய பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் தொடர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூத்த ஈரானிய அதிகாரிகள் இன்றைய தினம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு வந்திருக்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலீபா வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி உள்ளிட்டோர் பங்கெடுக்கின்றனர் மேலும் வாஷிங்டன் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் சிறப்பு தூதர் ஸ்டீவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அமெரிக்கா தயாராக இருக்கிறது

ஈரான் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு நல்லெண்ணத்துடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டால் அமெரிக்கா தனது ஆதரவு கரங்களை நீட்ட தயாராக இருப்பதாக அந்த நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் கூறியிருக்கிறார். ஏற்கனவே வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளின் மீது ஈரான் நிகழ்த்தும் தாக்குதலும் உலக அளவில் தீவிரமடைந்திருக்க கூடிய பொருளாதார சிக்கலும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

அதன் காரணமாகவே உடனடியான ஒரு தீர்வை நோக்கி அமெரிக்க விரைவாக நகர்கிறது. ஆனால் தெஹ்ரான் நிலை வேறாக உள்ளது. பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருந்தாலும் ஈரானியர்கள் அமெரிக்கர்களை நம்ப மறுக்கின்றனர். அதோடு, இஸ்ரேல் தொடர்ந்து இஸ்தான்புல்லை தாக்கி வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

கள நிலவரம் வேறாக இருக்கிறது.

யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதத்தை தயாரிக்க உள்ளதாக குற்றம் சாட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது. இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அன்று மத்திய கிழக்கில் தொடங்கிய போர் பதற்றம் மேற்காசிய நாடுகள் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.

ஈரானுக்கு ஆதரவாக லெபனான் களத்தில் இறங்கியது. ஈரான் அமெரிக்காவுக்கு பதில் வினையாற்ற தொடங்கியது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களை ஈரான் தாக்கி அழித்ததோடு உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து ஆதாரமான ஹோர்முஸ் நீர்முனையை மூடியது.

இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் தான் ஹோர்முஸ் நீர் முனையை திறக்க ஈரானுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வரை கெடு விதித்தது அமெரிக்கா. மேலும் அன்றைய தினம் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரான் என்ற நாகரிகமே இருக்காது எனவும் அவர் பேசியிருந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதனை தொடர்ந்து ஈரானும் அமெரிக்காவும் இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தத்தை மேற்கொள்வதாக கூறினர்.

மேலும் ஈரான் தரப்பிலிருந்து சில நிபந்தனைகளும் அமெரிக்கா தரப்பிலிருந்து சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. நிபந்தனைகளை தொடர்ந்து இன்று இரு நாடுகளின் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இஸ்தான்புல்லில் நடந்து வருகிறது.

ஈரான் விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டாரா

  • ஹார்மோஸ் நீர் முனையை திறக்க வேண்டும் எனில் போர் இழப்பீடு தர வேண்டும்.
  • வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.
  • ஹோர்முஸ் நீர் முனையில் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் சில முக்கிய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • எ ஹோர்முஸ் நீர்முனை முழுமையாக திறக்கப்பட்டால் ஈரானின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என ட்ரம் தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் பாகிஸ்தானுக்கு லாபம் என்ன

மிக தீவிரமடைந்த ஈரான் அமெரிக்கா போரை மத்தியஸ்தம் செய்து இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உதவியது பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப் தான்.

உலக அரங்கில் இது மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு போக்காகும். உலகம் முழுக்க எரிபொருள் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் இந்த முன்னெடுப்பு பல வளைகுடா நாடுகளால் பாராட்டப்பட்டது. இந்த சூழலில் தான் பாகிஸ்தான் ஒரு வேலை இந்த பேச்சுவார்த்தையில வெற்றி பெற்றால் அது மிகக் குறிப்பிட தகுந்த ஒரு அரசியல் திருப்புமுனையாக அந்த நாட்டிற்கு அமையும் இதன் மூலம் பல்வேறு முன்னேற்றங்களை அவர்களால் எட்ட முடியும் என வும் சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link