திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்காப்பிற்காக ஜெர்மனி பிஸ்டல் வைத்துள்ளார்.
சொத்துக்கள் விவரங்கள்
அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அவரை விட அவரது மனைவி ஜெயகாந்தியின் பெயரிலேயே அதிகப்படியான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.அசையும் சொத்து: அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் ₹38.19 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் ₹4.80 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளன.
அசையா சொத்து: அமைச்சரின் பெயரில் ₹59.68 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. அவரது மனைவியின் பெயரில் ₹2.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன.
தங்க நகைகள்: அமைச்சரிடம் 120 கிராம் தங்கச் செயின் (மதிப்பு ₹17.40 லட்சம்) உள்ளது. அவரது மனைவியிடம் 3,012 கிராம் (சுமார் 376 சவரன்) தங்க நகைகள் உள்ளன, அதன் மதிப்பு ₹4.36 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
ஜெர்மனி நாட்டு பிஸ்டல் (Pistol)
இந்த வேட்புமனுவில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்காப்பிற்காக ஒரு துப்பாக்கி வைத்திருப்பதை உறுதி செய்துள்ளார். ‘Walther Germany’ நிறுவனத்தைச் சேர்ந்த இந்த பிஸ்டல் சந்தை மதிப்பு சுமார் ₹40,000 ஆகும்.

pistol
நிலுவையில் உள்ள 3 முக்கிய வழக்குகள்
அமைச்சர் தனது பிரமாணப் பத்திரத்தில் தன் மீது நிலுவையிலுள்ள 3 குற்றவியல் வழக்குகள் குறித்தும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் தகுதி: இவர் 1969-ம் ஆண்டு வெள்ளாளன்விளை பிஷப் அசிரியா நினைவு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் நீண்டகாலமாக வெற்றி பெற்று வரும் அனிதா ராதாகிருஷ்ணன், இம்முறை மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பது அந்தப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
