தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை- கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – mnm will not contest in the elections official announcement by kamal haasan

2026 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்; இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kamal Haasan not contesting 2026 TN Election(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சி நேரடியாக போட்டியிடப் போவதில்லை என அதன் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கமல் எக்ஸ் பதிவு

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நலனுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அப்போது முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும், தமிழக பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களும் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்கிறேன்.
இன்றைக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்கு தரவாகச் சொல்லப்படும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம். எப்படியாவது தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மதிப்புடன் சக்திகள் சேர்ந்து செயல்பட வேண்டிய சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முக்கியமானது. நியாயமானதும் கூட. ஆனால், பேச்சு நடந்த விதமும் தொண்டர்களின் உணர்வுகளும் ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது. எனவே, பேச்சு நடந்த விதமும் தொண்டர்களின் உணர்வுகளும் ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது என்பதை தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. தமிழக மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இது தியாகம் அல்ல; கடமை. சுயநலம் அல்ல; பொறுப்பு.
தேர்தல் அரசியல் யாருமே இப்படி செய்ததில்லை என்று கேட்கிறார்கள். ஒரு புதிய அரசியல் நாகரிகத்தின் விதை நாம் போட்டது என்று பணிவோடு சொல்கிறேன். முதல்வர் அவர்கள் அன்போடு அனுப்பிய பெருமையோடு மறுபடியும் அன்பின் வழியிலே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் குடும்பத்திற்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு என்ற பல தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடு என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இனிய தேவை. இது வெறும் ஆட்சி மாற்றமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தேசீயப்பாதை.
ஆகவே 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்றும் முடிவை தீர்மானித்துள்ளோம்.
என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு இந்தச் சவாலினை ஒப்புதல் அளித்த அனைவருக்கும் நன்றி. இந்த முடிவு உங்களுக்கு, உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.
அரசியல் காலத்தில் தேர்தல் ஒரு பகுதி தான். அதுவே இறுதி என்று ஆகாது. அரசியல் மாற்றங்கள் என்பதும் களப்பணிகள், மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் என்பதுமே முக்கியம்.

மிக விரைவில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சியோடு நாம் சந்தித்து வாழ்த்துவோம் என நம்பிக்கை எனக்கு உள்ளது.