தேர்தல் ஆணையத்தை போல் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது – எம்.எல்.ஏ அருள் பேட்டி! – anbumani cannot deceive the court like the election commission mla arul interview

தேர்தல் ஆணையத்தை தனக்கு சாதகமாக மாற்றியதை போன்று, நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது என நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ அருள் பேசியிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இரண்டு துண்டுகளாக பிரிந்து இருக்கிறது. ராமதாஸ் தரப்பு பாமக எனவும் அன்புமணி தரப்பு பாமக எனவும் இரண்டு தரப்புகளாக பிரிந்து நிற்கின்றனர்.

அன்புமணியை செயல் தலைவராக மாற்றிய பின்பு தந்தை மகன் இடையே ஏற்பட்ட பூசலால் காட்சி இரண்டாக உடைந்தது. இதில் பெரும்பான்மையான நிர்வாகிகள் அன்புமணி பக்கமே இருக்கின்றனர். மேலும் கட்சி சின்னமும், பெயரும் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி அன்புமணியிடமே இருக்கிறது.

இந்த நம்பிக்கையிலே தான் அன்புமணி தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து திமுகவை எதிர்த்து கடுமையாக அரசியல் செய்து வருகிறார். ஆனால் தந்தை மகன் மோதலால் பாட்டாளி மக்கள் கட்சி பலவீனம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. வட மாவட்டங்களில் இருந்த பாமக வாக்குகள் உடைந்து கடந்த தேர்தலிலே ஒருபாதி திமுக பக்கம் சென்றுவிட்டதாகவும், சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் அன்புமணி பாமகவின் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது எனவும் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். பாமக நிறுவனரை கட்சியின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என அன்புமணி தரப்பு கோரி இருப்பதால் உரிமையியல் நீதிமன்றம் ராமதாஸ் மனுவின் மீதான விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது நிறுவனர் ராமதாஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்பேன் என கூறி இருந்தது பெரும் பேசுபொருளாக மாறியது. இன்றைய தினம் தைலாபுரம் தோட்டத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் பேசும்போது சேலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போவது உறுதி எனவும், வெற்றி பெறுவது உறுதியிலும் உறுதி எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் கட்சியும் சின்னமும் சார்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருவதாகவும் ஆனால் நாங்கள் ஒன்று செய்தால் அவர்கள் 10 செய்து அதனை கலைத்து விடுவதாகவும் அருள் வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஆனாலும் இறுதியில் தர்மம் தான் வெல்லும் எனக் கூறிய அவர் தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க ஒரு தரப்பின் ஆதரவாகவே செயல்படுவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
அவரிடம் செய்தியாளர்கள் ஜி.கே மணியையும், உங்களையும் அன்புமணி புறக்கணிக்கிறார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் என்னை புறக்கணிக்க வேண்டியது என்னை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய மக்கள்தான். வேறு யாரும் கிடையாது என காத்திரமாக கூறினார் மேலும் அங்கு இருக்கக்கூடிய 2 லட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்களுக்கு வேலைக்காரனாக இருந்து கொண்டிருப்பதாக கூறிய அவர் தேர்தலில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நான் முடித்து விட்டேன் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும் வழக்கை ஒத்தி வைத்ததில் ஐயாவுக்கு (ராமதாஸ்) எந்த பின்னடைவும் கிடையாது என கூறிய அவர், தேர்தல் ஆணையத்தை ஒரு தரப்பிற்கு ஆதரவு தருமாறு செய்தது போன்று நீதிமன்றத்தை ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள் எனவும் அன்புமணியை சூசகமாக சாடி இருந்தார்.

Source link