சாலை அமைக்கும் பணியின் போது மாநகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற விதிமுறையை பின்பற்றாமல் மாநகராட்சி ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில் தான்தோன்றித்தனமாக இவர் மட்டுமே சாலை அமைத்து வருகிறார் என்றால் தரமற்ற சாலையை அமைப்பதற்காக அரசு அதிகாரிகளை இவரே மேற்பார்வை இட வேண்டாம் என்று கூறிய அனுப்பி இருக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மக்கள் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல், தேர்தல் விதிகளை தற்போது கடைபிடிக்க வேண்டும். அதற்கு மாறாக ஒரு சதவீதம் கூட தேர்தல் நடைமுறை விதிகளை கடைபிடிக்காமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.தேர்தல் காலத்தில் நடக்கும் செயல்பாடுகள் மற்றும் சூழ்நிலையே தெரியாத அளவுக்கு மக்கள் உள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை உள்ள நிலையில் எந்த இடத்திலும் தேர்தல் பறக்கும் படை அரசியல்வாதிகளின் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்வதாக எங்கும் செய்திகள் இல்லை, தேர்தல் அதிகாரிகள் பணி செய்கிறதா இல்லையா என்பது தெரியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டும் எழுகிறது.
திமுகவுக்கு ஆதரவாக அதிகாரிகள்
இந்நிலையில் திமுக பிரமுகர் கருணாநிதி பல கோடி மதிப்பீட்டில் தரமற்ற முறையில் மாநகராட்சி அதிகாரிகள் இல்லாமலேயே தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் எழுப்பும் வகையில் தேர்தல் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர்.
திருவண்ணாமலை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் திமுக பிரமுகர் கருணாநிதி அவர்களின் கட்டமைப்பு நிறுவனமான ஐ ஆர் சி நிறுவனத்தின் மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தார் சாலை அமைக்கும் பணியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தார் சாலை அமைக்கும் பணி
ஒருபுறம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்பட்டுள்ளது. தார் சாலை அமைக்கும் பணி தரமாக இருக்கிறதா என்று சொன்னால், தரமற்ற சாலையை அவசர அவசரமாக சாலை அமைத்து மக்களின் வரிப்பணத்தை எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சாலை அமைத்து வருகின்றனர் என்று அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே
தற்போது தேர்தல் வருகிறது என்கின்ற ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக அனைத்து சாலைகளையும் தரமற்ற முறையில் அமைத்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக சாலை அமைக்காமல் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு ஏதுவான சாலையாக இல்லாத நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருவது திமுகவினர் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே சாலையை அமைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிவதாக கூறுகின்றனர்.
தமிழக ஆளுநர் ரவிக்கு இதுகூட தெரியாதா? திமுக அமைச்சர் ரகுபதி முரட்டு அட்டாக்
வரிப்பணம் கொள்ளை
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கக்கூடிய ஐ ஆர் சி கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் நிறுவனர் கருணாநிதி திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாநகராட்சியின் மூலமாக ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு பல கோடி ரூபாய் தரமற்ற முறையில் சாலை அமைப்பதன் மூலமாக மக்கள் வரிப்பணத்தை தொடர்ந்து கொள்ளையடித்து வருகிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
