மத்திய கிழக்கில் நாடுகளில் தொடரும் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாட்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் இஸ்ரேல் மோதல்
நாடு தழுவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏப்ரல் 7 ஆம் தேதி, அதாவது இன்று, இரவு 8 மணி முதல் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
டென்ஷன் ஆகும் திமுக ஆதரவாளர்கள்! காரணம் காங்கிரஸ்?
பாகிஸ்தானில் இரவு நேர லாக்டவுன்
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் திங்களன்று நடைபெற்ற பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி, பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், இஸ்லாமாபாத், கில்கிட்-பல்டிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் அன்றாடத் தேவைகளை விற்கும் கடைகள் இரவு 8 மணிக்கு மூடப்படும். இருப்பினும், கைபர் பக்துன்க்வாவின் சில முக்கிய நகரங்களில் உள்ள சந்தைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
உணவகங்களை மூட அரசு உத்தரவு
அரசு வழிகாட்டுதல்களின்படி, பேக்கரிகள், உணவகங்கள், தந்தூர்கள், உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். வீடுகளில் நடைபெறும் தனியார் திருமணங்களும் இந்த நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். மருந்துக் கடைகள் மற்றும் மருந்தகங்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான பதற்றம்
மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான பதற்றமே எரிசக்தி நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய இந்த மோதல், வளைகுடாப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் அமெரிக்கத் தளங்களைத் தாக்கியுள்ளதுடன், உலகின் முக்கிய எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடல்வழிப் போக்குவரத்தையும் தடுத்துள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இந்த நெருக்கடியால் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பெருமளவில் உயர்ந்தன. மார்ச் 6 அன்று, அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.55 உயர்த்தியது. அதன்பிறகு, ஒரு மாதம் கழித்து, ஏப்ரல் 2 அன்று, பெட்ரோல் விலை மேலும் அதிகரித்து, தற்போது லிட்டருக்கு ரூ.458.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.520.35 ஆகவும் உள்ளது. இருப்பினும், அரசாங்கம் பின்னர் தற்காலிக நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.378 ஆகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
