சென்னை,
கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி ஆண்கள் ‘ சிறந்த வீரர் ’ விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சாஹிப்சாதா பர்ஹான், வில் ஜாக்ஸ் மற்றும் ஷாட்லி வான் ஸ்கால்க்விக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஐ.சி.சி பெண்கள் ‘சிறந்த வீராங்கனை ’ விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஹர்ஷிதா சமரவிக்ரமா, பாத்திமா சனா மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த வீரர், வீராங்கனைகள் பிப்ரவரி மாதத்தில் தங்களது அணிகளுக்காக வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டங்களின் அடிப்படையில் ஐ.சி.சி அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
