கொல்கத்தா,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் ஒவ்வொரு அணியும் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், கொல்கத்தா அணியின் புதிய ஜெர்சி நாளை அறிமுகம் செய்யப்படும் என அந்த அணி எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு ஜெர்சி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
