பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட ஈரானை தாக்குவோம்: டிரம்ப் பேட்டி

வாஷிங்டன் டி.சி.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

Also Read
தமிழகம், கேரளா உள்பட 5 மாநில தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட ஈரானை தாக்குவோம்:  டிரம்ப் பேட்டி

இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், டிரம்ப் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, ஈரானின் கார்க் தீவிலுள்ள எண்ணெய் கட்டமைப்புகளின் பெரும்பகுதியை அமெரிக்கா, இதற்கு முன் நடத்திய தாக்குதலின்போது முற்றிலும் அழித்து விட்டது. எனினும், பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட ஈரானை தாக்குவோம் என கூறினார்.

மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று சர்ச்சையானது. அதில், உலகில் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. அதனால், எண்ணெய் விலை உயரும்போது, எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது என டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார்.

ஆனால், ஒரு ஜனாதிபதியாக, மத்திய கிழக்கை உண்மையை சொல்ல போனால் உலகையே அழிக்கும் அணு ஆயுதங்களை வைத்திருக்கிற, ஈரானின் தீங்கு ஏற்படுத்தும் அரசாட்சியை தடுத்து நிறுத்தியுள்ளேன் என்பதே எனக்கு மிக பெரிய நன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விசயம் ஆகும். அதனை ஒருபோதும் நான் நடக்க விடமாட்டேன் என பதிவிட்டார்.

மேற்காசிய மோதலால், ஏற்கனவே கச்சா எண்ணெய் அடங்கிய பீப்பாய் ஒன்று 100 அமெரிக்க டாலர் வரை உயர்ந்து உள்ளது. இந்த சூழலில், எண்ணெய் வளம் கொண்ட ஈரானின் கார்க் தீவை பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட தாக்குவோம் என டிரம்ப் கூறியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Source link