மக்களே வானிலை மாறுகிறது..தமிழகத்தில் 6 நாட்கள் தொடர்ந்து மழை – எங்கு, எப்போது? வானிலை மையம் அலெர்ட்! – chennai meteorological centre states that rain is likely to persist in tamil nadu for the next six days

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நகரின் ஒரு சில பகுதிகளில் மழைப்பு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டை பொறுத்தவரை அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மாறும் வானிலை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : மன்னார் வளைகுடா பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் தாக்கல் கர்நாடகா வளைகுடா வரை காணப்படுகிறது. அதன் காரணமாக கர்நாடாக மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைஅடி வாரத்தில் உள்ள என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.மேலும், தமிழகத்தில் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.இதனுடன், தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

6 நாட்களுக்கு மழை தொடர்ச்சி

தமிழ் நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை தொடர்ச்சியாக காணப்படும் சாத்தியம் உள்ளது. இதற்குக் காரணமாக மன்னார் வளைகுடா பகுதிமுதல் வடக்கு உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த வானிலை மாற்றம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
அதே சமயம், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 22ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருந்தாலும், பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

வானிலை மையம் தகவல்

மார்ச் 23 முதல் 26ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடைக்கிடையே லேசான மழை தொடரும் என கூறப்படுகிறது. ஆனால், மற்ற பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாமல் வறண்ட சூழ்நிலை நிலவக்கூடும்.
மேலும், மார்ச் 22 முதல் 24 வரை தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை, இன்று அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு தற்போது எந்தவித எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.