மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து திடீர் விலகல்..!

தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தேமுதிக-வின் முக்கிய நிர்வாகியான நடிகர் மீசை ராஜேந்திரன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நடிகர் மீசை ராஜேந்திரன் இளம் பருவம் முதலே விஜயகாந்தின் தீவிர ரசிகர். பார்ப்பதற்கு மிரட்சியான தோற்றத்தில் முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கும் ராஜேந்திரநாத், விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியவுடன் அதில் உறுப்பினராக இணைந்துக் கொண்டார். கட்சிப்பணிகளில் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கிய அவருக்கு இளைஞரணியில் மாநில அளவிலான பதவியை விஜயகாந்த் வழங்கினார்.

தேமுதிக சார்பில் கடந்த மூன்று சட்ட சபை தேர்தல்களிலும் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறாது. இந்த நிலையில்தான், மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கேப்டன் மன்றத்தில் 31ஆண்டுகளும் தேமுதிகவில் 21 ஆண்டுகளும் உழைத்து இருப்பதாக மீசை ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தார். விஜயகாந்த் மறைவுக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த்க்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வந்ததார். தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகியது தேமுதிகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Source link