ஈரோடு,
2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர், உடல்நலக்குறைவால் 2023-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி அன்று உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டு எம்.எல்.ஏ.வாக இருந்த அவரும் உடல்நலக்குறைவால் 2024 டிசம்பர் 14-ந்தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசிடம் இருந்து இந்த தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கைவசப்படுத்தி உள்ளது.
