மோஜ்தபா கமேனியின் தலைக்கு குறி வைத்த இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றம்! – israel targets mojtaba khamenei war tensions continue in the middle east

மேற்காசிய நாடுகளில் நிலவும் கடும் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. கடந்த 28 -ஆம் தேதி இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல்களை நடத்தியது. கிட்டத்தட்ட 2000 இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்கள் குறிப்பாக பள்ளிகள் பொதுமக்கள் வசிப்பிடங்கள், இலக்காகப்பட்டன. இதில் பல மாணவிகள் குழந்தைகள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்து இருந்தது.

பதிலடி கொடுத்த ஈரான்..!

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு சாதகமாக செயல்படக்கூடிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களை ஈரான் தாக்கி அழிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான ‘அரம்கோவையும்’ தாக்கி அழித்தது. இதனால் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வழி வகுத்தது.
அதோடு ஹார்மூஸ் நீர் முனையை ஈரான் மூடியதால் உலகம் முழுக்க எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. மேலும் இனி ஒருபோதும் அமெரிக்காவுடன் எந்தவித சமரச பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை எனக் கூறிய ஈரான் ஹார்மூஸ் நீர்முனை வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட செல்லாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்த சூழலில்தான் ஈரானின் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே ஈரானின் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களை கொல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்திருந்த இந்த சூழலில் மோஜ் தபா உயிருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

நெதன்யாகு பேசியதன் பின்னணி என்ன?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் நயீம் கசேமை இஸ்ரேல் குறி வைத்து இருக்கிறதாக தகவல்கள் கசிகின்றன. இந்த விவகாரம் குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எந்த பயங்கரவாத தலைவருக்கும் நான் ஆயுள் காப்பீடு எடுக்க மாட்டேன் என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஈரான் உச்சபச்ச தலைவர் மோஜ் தபா கமேனிக்கு இஸ்ரேல் குறி வைத்திருப்பது உறுதியாக தெளிவாகிறது.

மேலும் ஈரானில் ஏற்கனவே உள்நாட்டு போர் மூண்டு இருக்கக் கூடிய இந்த சூழலில், புதிய அரசு அமைவதற்கு அந்த நாட்டு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெதன்யாகுவும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சூசகமாக கேட்டுக்கொண்டனர். மேலும் தாகத்தில் இருக்கிற ஒருவருக்கு நீரை காட்டத்தான் முடியும் ஊட்ட முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Source link