ராகுல் – ஸ்டாலின் உறவில் விரிசல்… 2026 தேர்தல் முடிவுக்கு பின் மாறும் தமிழக அரசியல்- காத்திருக்கும் தவெக! – how rahul gandhi mk stalin rift change political dimension after 2026 election results

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி விரும்பினார் என்று அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருக்கிறார். ஆனால் 2026 தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டனர். முதலில் காங்கிரஸிற்கு என்ன தான் பிரச்சினை? என்று பார்க்கலாம். தவெக தலைவர் விஜய் கொளுத்தி போட்ட அதிகாரப் பகிர்வு, அதாவது ஆட்சியில் பங்கு என்ற விஷயத்தை காங்கிரஸ் கெட்டியாக பிடித்து கொண்டது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்

இதற்கு திமுக தலைமை ஒத்துவராத நிலையில், கூடுதல் இடங்களை கேட்டு நெருக்கடி கொடுத்தது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மாறி மாறி பேசி கூட்டணிக்குள் பெரிய தலைவலியை ஏற்படுத்தினர். பின்னர் கனிமொழி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தூதுவர்களாக இருந்து பிரச்சினைக்கு தீர்வு தேடி தந்தனர். இருப்பினும் கூடுதல் சீட் என்பதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உறுதியாக இருந்தார். இதை கண்டிக்காமல் கட்சி மேலிடம் ரசித்தபடியே இருந்தது.

காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியுமா?

2024 தேர்தலில் ஸ்டாலினுக்கு ஸ்வீட் கொடுத்த ராகுல்

இவ்வளவு நெருக்கடிகளால் கடந்த தேர்தலை காட்டிலும் 3 இடங்களை கூடுதலாக பெற்றனர். ஒருவகையில் இதையும் வெற்றியாக தான் காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. ஆனால் இந்த சச்சரவுகளுக்கு மத்தியில் தமிழகத்திற்கு ராகுல் காந்தி வரவும் இல்லை. தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசவும் இல்லை. 2024 மக்களவைத் தேர்தலின் போது கோவை வந்திருந்த ராகுல் காந்தி, அங்கிருந்த ஸ்வீட் ஸ்டாலுக்கு செல்ல சாலையின் குறுக்கே உள்ள தடுப்பில் எகிறி குதித்து சென்று ஸ்வீட் வாங்கி வந்தது பெரிதும் வைரலானது.

அதன்பிறகு பிரச்சார மேடைக்கு சென்று அந்த இனிப்பை மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்தார். அதுமட்டுமின்றி 2019 மக்களவைத் தேர்தலின் போது இண்டி (INDIA) கூட்டணிக்கு ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என முதலில் கூறியவர் மு.க.ஸ்டாலின். இத்தகைய நட்பு 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது என்ன ஆனது? என்ற கேள்வி எழுகிறது. அதிகாரப் பகிர்வும், தவெக உடனிருந்த கூட்டணி வாய்ப்பும் ராகுலின் மனதை மாற்றி விட்டதோ? என்கின்றனர்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் என்ன நடக்கும்?

திமுக 118 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்தால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஒருவேளை மெஜாரிட்டி குறைந்தால் ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் ஓடி வரும். அதைத் தான் டெல்லி மேலிடமும் ரசிப்பதாக தெரிகிறது. சுதந்திர இந்தியாவில் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது கட்சி அளவில் பெரிதும் கரைந்து போய்விட்டது.

கறை படிந்த கைகள், மாற்று கட்சிகளுக்கு தாவிய வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டு, மீண்டும் புத்துயிர் பெற்று எழுவதற்கு சிரமப்பட்டு வருகிறது. எனவே மாநில அளவில் தங்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கு, கூட்டணி கணக்குகளையும், அதிகாரப் பகிர்வையும், உள்ளாட்சிகளில் வலிமையை அதிகரிக்கவும் வேண்டியுள்ளது. 2026 தேர்தலில் தவெகவின் நிலை என்னவென்று தெளிவாக தெரிந்து விடும்.

தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

அவர்களின் வாக்கு வங்கி கணக்கு அடுத்து வரும் தேர்தல்களில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க உதவும். அதில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவதற்கும் காய் நகர்த்தும். அதேசமயம் 2029 மக்களவைத் தேர்தலில் தங்களின் வெற்றி கணக்கை உறுதி செய்யும் வகையில் முடிவுகளை எடுப்பர். இதற்கிடையில் திமுக வேண்டும், தவெக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்து விஸ்வரூபம் எடுத்து வரும் கோஷ்டி பூசல்களை டெல்லி தலைமை சரியாக கையாள வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒருமுறை கட்சி கரையலாம்.

Source link