ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காந்திக்கு பதில் அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக போட்டியிட சான்ஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், தான் தனது மகனுக்கு சீட் வேண்டாம். மீண்டும் தனக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி, திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளனர். வேட்பாளர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஆனால் ராணிப்பேட்டை தொகுதியில் மட்டும் திமுகவில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராணிப்பேட்டை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக அமைச்சர் ஆர் காந்தி உள்ளார்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
அமைச்சருக்கு பதில் மகனுக்கு சீட் வழங்கிய திமுக
அமைச்சர் ஆர் காந்திக்கு வயது 80 ஆகிறது. இருப்பினும் கூட அமைச்சர் காந்தி மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் சீட் கேட்டுள்ளார். ஆனால் அவரது வயதை காரணம் காட்டி திமுக தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை. காந்திக்கு பதில் அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் காந்திக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார்.
அதுமட்டுமின்றி தனது மகன் வினோத் காந்திக்கு பதில் தனக்கே மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். இதுதொடர்பாக திமுக தலைமைக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விஷயத்தில் தற்பாது வரை திமுக தலைமை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
திமுக தலைமை குழப்பம்
மேலும் தற்போது திமுக தலைமை குழப்பத்தில் உள்ளது. மீண்டும் அமைச்சர் காந்திக்கு சீட் வழங்குவதா? இல்லாவிட்டால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவரது மகன் வினோத் காந்தியையே களமிறக்குவதா? என்று திமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் ராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் வினோத் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
மேலும் தனக்கு சீட் வழங்கினால் மட்டுமே தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் என்று அமைச்சர் காந்தி தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி
இந்த ராணிப்பேட்டை சட்டமன்ற அமைச்சர் காந்தியின் கோட்டையாக உள்ளது. இங்கு அவர் மொத்தம் 4 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதேவேளையில் 2011, 2001 ஆகிய ஆண்டுகளில் தோல்வியடைந்தார். கடந்த 2021 தேர்தலில் காந்தி திமுக சார்பில் களமிறங்கினார். அவர் மொத்தம் 1,03,291 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் எஸ்எம் சுகுமார் 86,793 ஓட்டுகள் வாங்கினார். இதனால் காந்தி 16,498 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பாக 2016 தேர்தலில் காந்தி 81,724 ஓட்டுகள் பெற்றதோடு, அதிமுக வேட்பாளர் எழுமலை 73,828 ஓட்டுகள் வாங்கினார். இதனால் ஆர் காந்தி 7,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். 2026 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி வேட்பாளராக அறுிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இந்த தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் விஎம் கார்த்திகேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாரிகா சல்மான் மற்றும் தவெக சார்பில் தாஹீரா உள்ளிட்டோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்
