ராமதாஸ் அணிக்கு புதிய சின்னம்: 30 தொகுதிகளில் சிலிண்டர் போட்டி – மாம்பழம் நிலைமை என்ன? – cylinder symbol has been allotted to candidates of the pmk alliance led by ramadoss in 30 constituencies

ராமதாஸ் தலைமையிலான பாமக அணி வேட்பாளர்களுக்கு 30 தொகுதிகளில் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு தேர்தல் சமயத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சசிகலாவுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

பாமக கூட்டணி மாற்றம் 2026

முன்னதாக அன்புமணி தரப்பு பாமக அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.பாமக பொறுத்தவரை கூட்டணியில் இடம்பெற்றால் 30 தொகுதிகள் வரை போட்டியிடும். அதேபோல் இந்த முறையும், தந்தை , மகன் பிரச்சானைகளுக்கு அப்பாற்பட்டு , ராமதாஸ் கட்சியை வலுப்படுத்த அதிமுகவுடன் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக பாஜக தரப்பில் இருந்தும் அதிமுக தரப்பில் இருந்தும் முக்கிய புள்ளிகள் ராமதாஸூடன் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.இதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview

தமிழக அரசியலில் வன்னியர் வாக்கு வங்கி என்பது குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் தர்மபுரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.இதனால், வன்னீயர் வாக்கு சிறதக்கூடும் என்பதால்அன்புமணிக்கு குறைவாக தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளது.பாமக கட்சி தனது தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.அதே போல் அன்புமணி மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

ராமதாஸ்- சசிகலா கூட்டணி

இப்படியான நிலையில், ராமதாஸ் தரப்பு பாமகவும், தூரோகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சசிகலாவும் கூட்டணி வைத்துள்ளது.மொத்தம் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மற்ற கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் அதற்கு டஃவ் கொடுக்கும் வகையில்,சசிகலா பிரச்சாரம் நடத்தி வருகிறார்.அதேபோல் சட்டமன்ற தேர்தலில் அன்புமணி போட்டியிடும் தொகுதிகளில் ராமதாஸ் தேர்வு செய்து நிர்வாகிகளை அறிவித்தார்.

வன்னியர் வாக்கு வங்கி

இந்த நிலையில் பாமகவுக்கு சோளிங்கர், அணைக்கட்டு, நெல்லை, பரமத்தி வேலூர், ஆத்தூர், தருமபுரி, பென்னகரம் உள்ளிட்ட மொத்தம் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கு ‘சிலிண்டர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி கட்சியின் பெயரையும், சின்னத்தை பயன்படுத்த கூடாது. அதற்கான உரிமை அவருக்கு இல்லை.கட்சியின் நிறுவனர் என்ற முறையில் மாம்பழம் சின்னத்தை தனக்கு ஒதுக்கவேண்டும்.அல்லது பாமக உட்கட்சி மோதல் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இந்த வழக்கு நேற்று நீதிபதி டி.வி தமிழ் செல்வி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

ராமதாஸ் நிலைப்பாடு

இந்த சூழலில், அதிமுகவின் வெற்றிக்கு பாமகவின் வாக்குகள் மிக அவசியமாக பார்க்கப்படுகிறது. அன்புமணிக்கு மாம்பழம் தக்கவைத்து கொண்டுள்ளதால், வன்னீயர் ஓட்டு கணிசமாக வாக்குகள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக மக்களுக்கு மாம்பழம் சின்னம் என்றாலே ராமதாஸுடையது தான் தெரியும்.ஆனால், இந்த தேர்தலில் ராமதாஸூக்கு சுயேட்சை சின்னம் வழங்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் ராமதாஸ் சுயேட்சை சின்னத்தை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தன்னுடையா வாக்கு சதவீதத்தை காண்பிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ராமதாஸ் தனித்து நிற்பது வட தமிழகத்தில் ஒரு சதுரங்க ஆட்டம் போன்றது. இது பெரிய கட்சிகளின் கோட்டைகளைச் சரிக்கும் வல்லமை கொண்டது, ஆனால் பாமகவின் ஒட்டுமொத்த பலத்தைப் பிரிக்கும் அபாயமும் இதில் உள்ளது.