தவெகவின் தாக்கம் 10 – 15 நாட்களாகக் குறைந்து வருவதாகப் புரட்சி அதிமுக நிறுவனர் புகழேந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதற்காகக் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக விஜய் டெல்லி வந்திருந்தார் . அப்போது பாஜக மறைமுகமாக விஜய்யிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது 90 தொகுதிகள் மற்றும் 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி தருகிறேன் என பாஜக டீல் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்சித் தலைவர்கள் தற்பொழுது பேசி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தகவின் தாக்கம் 10 – 15 நாட்களாகக் குறைந்து வருகிறது எனப் புரட்சி அதிமுக நிறுவனர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், இன்றைக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன் அதில் எந்தவித பாதிப்பும் இருக்காது. அரசியல் வருகை ஆரம்பக் கட்டத்தில் மிக வலுமையாக இருந்தது. ஆனால் கடந்த 10 15 நாட்களாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் குறைந்து வருகிறது.
விஜயை CORNER செய்றாங்களா _இது என்ன அரசியல்_
இதற்குக் காரணம் விஜய்க்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாம் கட்சித் தலைவர்கள் தான். அவர்களின் கொள்கையும் நோக்கம் என்னவாக இருக்கிறது என்றால் கூட்டணியில் யாரும் உள்ளே வரக்கூடாது. வேறு தலைவர்களையும் இணைத்துக் கொள்ளாமல் அவர்களே அந்த கட்சியைப் பிடித்துக் கொண்டுள்ளனர். ஆகவே ஒரு இயக்கம் என்பது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தலைவர் மேடையில் பேசுவது மட்டும் முக்கியம் கிடையாது எம்ஜிஆருக்குப் பின்னால் எவ்வளவு பெரிய நாவலர்கள் இருந்தனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனை பேர் எம்ஜிஆருக்காக திமுகவிலிருந்து விலகி வந்தார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது அனைவரும் ஏன் சென்னையை முகாமிடுகிறார்கள். அனைவரும் அவரவர் சொந்த தொகுதியில் நிற்க வேண்டும். அனைவரும் சென்னையை நோக்கிச் செல்வதற்குக் காரணம் தெரியவில்லை.
வேலை சென்னை அப்டேட் ஆகி இருக்கலாம் சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ளனர் என்ற காரணத்தினால் தருகிறார்களா என்று தெரியவில்லை. மேலும் சென்னையில் அம்மா ஜெயலலிதா நீண்ட வருடங்களாகப் போராடிப் பெற்றார்கள். ஆனால் திமுகவின் கோட்டையாகச் சென்னை உள்ளது. தவெக விஜய் தவறான முடிவு எடுத்துள்ளார். திமுக அதிமுக உள்ளிட்டோரின் ஓட்டுகளைப் பிரித்து விடுவார். இதனால் ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
இதுதான் தற்போது அரசியல் நிலைமை. தொடர்ந்து பேசிய புகழேந்தி கோயம்புத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது என்று கூறினார்.மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களில் என்ன நடந்ததோ அதுதான் நடக்கும். நான் வேலுமணியை குற்றம்சாட்டவில்லை. அதற்கான நிலை தற்பொழுது அதிமுகவுக்கு நடக்கும் என்று கூறினார்.
