விளாத்திகுளம் மாணவி கொலை.. மகள் உடலை பார்த்து தந்தை சொன்ன ஒற்றை வார்த்தை -நிலைகுலைந்த கிராமம்! – vilathikulam school girl assault murder case father delivers an emotional speech

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி கைதுசெய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் கைது செய்யபட்டுள்ள நிலையில் உயிரிழந்த மாணவியின் தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை(புகைப்படங்கள்Samayam Tamil)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த மாணவி 12 வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.தேர்தல் நேரத்தில், இந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. மாணவி காணாமல் போனதாக கூறி தந்தை புகாரளிக்க சென்ற போது குளத்தூர் மற்றும் விளாத்திகுளம் காவல்துறையினர் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்து இருந்தது.

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை

மேலும்,இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.இதனைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் புலனாய்வு பிரிவு, மோப்பநாய் பிரிவு என வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது .மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டது.

காவல்துறை நடவடிக்கையில் Sharmila கொந்தளிப்பு!

சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராவில் இல்லை என்ற போதிலும் அந்த பகுதியை சுற்றியுள்ள 98 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2514 தொலைபேசி தகவல்களும் சேகரிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 463 நபர்களை கண்காணித்து அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்பட்டது. இந்த நிலையில்தான் காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது.

காவல்துறை விசாரணை

சம்பவம் நடந்த மார்ச் 10ஆம் தேதி அந்த பகுதியில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் வந்திருப்பது பதிவாகி இருந்தது. யார் அந்த நபர்? அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து அந்த இருசக்கர வாகனம் மர்ம நபரால் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் திருடப்பட்ட அந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிக்கு வந்த அந்த நபர் யார் என சிசிடிவி கட்சியில் பதிவாகி இருந்த முகத்தோற்றத்தை வைத்து விசாரணை செய்தபோதுதான் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

தர்ம முனீஸ்வரன் கைது

அதாவது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பது தெரிய வந்தது .இதே போல் ஏற்கனவே இன்னொரு பாலியல் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டது அதற்கான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்ததும் பெரிய வந்தது கடந்த 10 ஆம் தேதி அன்று இப்படி கையெழுத்து 12ஆம் வகுப்பு மாணவி இயற்கை உபாதையை கழிக்க வந்தபோது தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து மிகக் கொடூரமாக படுகொலை செய்தது தெரியவந்தது.

கதறிய பெற்றோர்

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தர்ம முனிஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி கொலை செய்த குற்றவாளியை கைது நடவடிக்கையை தொடர்ந்து 10 நாள் போராட்டத்திற்கு பிறகு,மாணவியின் உடலை பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், குற்றவாளியை கைது செய்த பிறகு மகளின் உடலை வாங்குவதாக கூறினோம்.

காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகளின் உடலை வாங்க சம்மந்தம் தெரிவித்துள்ளோம். இது போன்ற நடவடிக்கையில் ஈடுப்படும் குற்றவாளியை சுட்டுக் கொள்ள வேண்டும்.எனது மகளுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் நடக்க கூடாது.