வேளச்சேரி MRTS ரயில்: 70k தொட்ட பயணிகள் கவுண்ட்… புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஸ்டேஷனில் புது வசதி! – velachery mrts puzhuthivakkam adambakkam station new facilities passenger response

சென்னையில் பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில உள்கட்டமைப்பு வசதிகள் கவலை அளிக்கும் வகையில் இருக்கின்றன. இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள கருத்துகளை விரிவாக இங்கே பார்க்கலாம்.

Velachery MRTS Extension Passengers Response
வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் சேவைக்கு எப்போது திறப்பு விழா நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு கிட்டதட்ட 18 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஒருவழியாக கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று இந்திய ரயில்வே நிர்வாகம் கிரீன் சிக்னல் கொடுத்தது. இதன்மூலம் கிண்டி – செங்கல்பட்டு வழித்தடத்தில் வரும் மக்கள், ஓ.எம்.ஆர் செல்வது மிகவும் எளிதாக மாறியது. பல கிலோமீட்டர் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.

பரங்கிமலை – பல்நோக்கு போக்குவரத்து முனையம்

பரங்கிமலை - பல்நோக்கு போக்குவரத்து முனையம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி, மாம்பழம், சைதாப்பேட்டை என எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தை அடைந்தால் போதும். MRTS பறக்கும் ரயில் சேவை இணைப்பு மூலம் 15 நிமிடங்களில் வேளச்சேரியை அடைந்துவிடலாம். இந்த சேவை தொடங்கி வைப்பதற்கு முன்பு வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை சுமார் 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது.

புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையங்கள்

புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையங்கள்

மார்ச் 14ஐ அடுத்த மூன்று நாட்களில் அப்படியே டபுள் மடங்காக 70 ஆயிரம் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதன்மூலம் புதிய ரயில் வழித்தடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. வேளச்சேரி – செயிண்ட் தாமஸ் மவுண்ட் இடையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் என இரண்டு ரயில் நிலையங்கள் மட்டுமே உள்ளன.

இவை பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு பயன்படுத்தாமல் இருந்ததால், மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன. சில சமூக விரோதிகள் அவ்வப்போது ஊடுருவி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

தெற்கு ரயில்வே புதிய வசதிகள் அறிமுகம்

தெற்கு ரயில்வே புதிய வசதிகள் அறிமுகம்

எனவே காவல்துறை ஒத்துழைப்புடன் சீர்செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் புதிய வசதிகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் வசதிகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 4 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படுகின்றன.

பீச் – மவுண்ட் புறநகர் ரயில் சேவை

பீச் - மவுண்ட் புறநகர் ரயில் சேவை

ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறது. சட்டவிரோத செயல்கள் நடப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இவற்றை வேகமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு ரயில் நிலையங்களும் புதுப்பொலிவு பெறும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை கடற்கரை முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை 43 ஜோடி நீட்டிக்கப்பட்ட புறநகர் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

வேளச்சேரி MRTS பீக் ஹவர் ரயில் சேவை

வேளச்சேரி MRTS பீக் ஹவர் ரயில் சேவை

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இரண்டு ஜோடி ரயில்கள், வேளச்சேரி முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை 3 ஜோடி ரயில்கள் என இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பீக் ஹவர்களில் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வேளச்சேரி MRTS வழித்தடத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பயணிகள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.